Showing posts with label வெளி நாடு வாழ் இந்தியர்கள். Show all posts
Showing posts with label வெளி நாடு வாழ் இந்தியர்கள். Show all posts

Wednesday, November 9, 2011

முடிந்தால் சிந்தியுங்கள் - 2

உறவுகளை துச்சமாக மதித்து, அந்நிய நாட்டில் கிடைக்கும் பணத்திற்காகவும், அதன் மூலம் கிடைக்கும் வசதிகளுக்காகவும், கட்டவிழ்த்த சுதந்திரத்துக்காகவும், ராஜ அடிமைகளாக உங்கள் வாழ்கையை தொலைத்து கொண்டிருக்கும் இந்தியர்களே! உங்கள் செயலை நியாயபடுத்த, இந்திய நாட்டில் அது நொட்டை, இது நொல்லை என்று சொல்வதை தயவு செய்து இன்றோடு நிறுத்தி விடுங்கள். உங்கள் தாயார் அசிங்கமாக இருந்தால், அழகாக இருக்கும் த்ரிஷாவையும், நயந்தாராவையும் அம்மா என்று எப்படி கூப்பிட முடியாதோ, அதே போல் எங்கள் தாய் நாட்டில் எவ்வளவு நொட்டைகள் இருந்தாலும், எவ்வளவு நொல்லைகள் இருந்தாலும் எங்களால் அவளை விட்டு கொடுக்க முடியாது! உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்தியாவில் இருங்கள், இல்லை உங்கள் விருப்பம் போல் உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று வாழ்கையை தொடங்குங்கள், நாங்கள் தடுக்கவில்லை, அதை விட்டு இந்தியாவை குறை சொல்லி உங்களையும் ஏமாற்றி கொண்டு, வருங்கால இந்தியாவையும் எமாற்றதிர்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை பற்றியும், உங்கள் செல்வம் கொழிக்கும் சமூகத்தில் இருக்கும் இருண்ட பகுதியை பற்றியும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். முதலில், செல்வம் என்ற வார்த்தைக்காக நீங்கள் இழந்ததையும், இழந்து கொண்டிருப்பதையும், இழக்க போவதையும் பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் நீங்கள் இன்னும் வாழ தொடங்கவே இல்லை என்பது புரியும்!

முடிந்தால் சிந்தியுங்கள்!

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்