Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Wednesday, June 12, 2013

எது பார்ப்பனீயம்!

பாக்கியம் ராமசாமி எழுதிய "அப்புசாமியும் ஹிப்னாடிச பூனையும்" படித்து கொண்டு இருந்தேன், நல்ல நகைச்சுவையோடும், சுவாரஸ்யமாகவும்,
விறுவிறுப்பாகவும் அமைந்திருந்த கதைக்களம் புத்தகத்தை கீழே வைக்கவே அனுமதிக்கவில்லை; திடீரென கதையின் கடைசி பக்கங்களில் தேச விரோத
சக்திகள், புலிகள், பிரபாகரன் என சம்பந்தமே இல்லாமல் கதை கரைபுரண்டி ஓட ஆரம்பித்தது. இதற்கு பெயர் தான் பார்ப்பனீயம் போல என நொந்து
கொண்டேன்.

ஆதார் அட்டையும்; கழண்ட டவுசரும்!

செத்தாலும் ஆதார் அட்டை வாங்க கூடாது என தீர்க்கமாய் இருந்தவனை, பிறந்த நாள் என்றும் பாராமல் ஆதார்க்கு போட்டோ எடுத்து வந்தால் தான்
சோறு என மிரட்டியதால் வேறு வழி இன்றி அவசர அவசரமாய் குளித்து பொடி நடையாக நடந்து மையத்தை அடைந்தேன், சரி சட்டு புட்டுன்னு
முடிச்சிட்டு கிளம்பிடலாம்னு பார்த்தா ஒரு ஐம்பது, அறுபது பேர் எனக்கு முன்னாடியே துண்ட விரிச்சி உக்காந்திருக்காய்ங்க, அதிலும் ஒரு சிலர்

என்னவோ ஷங்கர் படத்துல நடிக்க சான்ஸ் கேட்டு வந்தவய்ங்க மாதிரி புல் மேக்கப்போட ஆஜர் ஆயிருந்தாங்க. நிலைமையை நொந்து கொண்டே ஒரு
கியூவில் போய் நின்றேன்.

போன வாரம் செம கூட்டம்ல, இன்னைக்கு கொஞ்சம் பரவாயில்ல. ஒரு அக்கா உற்சாகத்துடன் சொல்லி கொண்டிருந்தாள்.

இந்த டாமி எப்பவுமே இப்படி தான் கூடவே வந்து தொல்ல பண்ணும். ஏய் ஓடு.. தன் செல்ல பிராணியை துரத்தி கொண்டிருந்தாள் இன்னொரு அக்கா.

பையன் ஊரிலுர்ந்து இப்ப தான் வந்தான், முகம் கழுவ போயிருக்கான். இதோ வந்துடுவான். அங்கு இருந்த ஒரு ஆபிசரிடம் சொல்லி கொண்டிருந்தாள்
பாட்டி ஒருத்தி.

மொதல லெப்ட் கைய வைக்கணும் அப்பறம் ரைட் கைய வைக்கணும் அப்பறம் பெரு விரல் ரெண்டையும் வைக்கணும் அப்பறம் அந்த பைனாகுலர்ல

பாக்கணும். அவ்வளவுதான். ஒரு வயதான பாட்டிக்கு விளக்கி கொண்டிருந்தார் சீனியர் ஒருவர் (ஆமாங்க நமக்கு முன்னாடியே எடுத்துட்டார்ல அப்ப சீனியர் தானே)

தம்பி தலைய நேரா வச்சு இந்த கேமராவ பாரு. முகத்த மேல தூக்கு, கண்ண மூடாத. ஒழுங்க ஒக்காரு. நீண்ட நேரமாக ஒரு சுட்டி சிறுவனிடம்
மன்றாடி கொண்டிருந்தார் ஒரு ஆபீசர்.

யோவ் எனக்கு பின்ன தானே வந்த நீ பாட்டுக்கு முன்ன போற.
அண்ணே அவரு பேஷெண்ட்.
அதுக்கு நான் என்ன பண்றது போய் கியூல வாங்க. எனக்கும் தான் உடம்பு சரி இல்ல.
போங்க போய் கியூல வாங்க.. வந்துட்டானுங்க @#$%^&*():"(பின்னாடி இருந்த அனைவரும் கோரஸாக)
வெற்றி களிப்புடன் ஒரு நடுத்தர வாலிபர்.

அந்த கியு எவ்வளவு வேகமா நகருது இங்க பாருங்க. வழக்கமான பொலம்பலுடன் பக்கத்து ஆசாமி.

டேய் தம்பி மண்ணில விளையாடுவையா பாரு கை ரேகை சரியாவே வர மாட்டேங்குது, ஒரு ரெண்டாவது படிக்கும் சிறுவனிடம் ஆபீசர்.

ஒரு வழியாக பேராக்கு பார்த்து கொண்டே நம் முறையும் வந்தது. அப்படியே போய் பத்து விரல்களின் ரேகைகளையும் கொடுத்து கண் கருவிழியின் ரேகைகளையும் கொடுத்து, க்ளோஸ் அப்பில் (நல்ல வேலை ஆபீசர் பயப்படவில்லை) ஒரு போஸ் கொடுத்து, பெயரில் உள்ள எழுத்து பிழைகளை சரி செய்து ரேஷன் அட்டையை வாங்கி கொண்டு கிளம்பினேன்.

ஆதார் அட்டை என்ற பெயரில் ஒரு மனிதனின் தனித்துவமான பத்து விரல் ரேகைகளையும், கண்ணின் கருவிழி ரேகையையும் பதிவு செய்து தன்

குடிமக்கள் மீது ஒரு கட்டற்ற அதிகாரத்தை நிறுவ முயலும் இந்த திட்டம் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஒரு மனித உரிமை மீறல் தான்.

பின்னொரு காலத்தில் குடிமக்களின் மரபணு. ஸ்டெம் செல்களை கூட தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த அரசு முயலும் அப்பொழுதும் கூட இந்த
எளிய மக்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இதே ஈடுபாட்டுடன் அதை வாரி வழங்குவார்கள்.

காரணம் கேள்வி கேட்பது இங்கு தேச துரோகம்.

Wednesday, April 3, 2013

கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே!

நம்ம கனவு வியாபாரியும், நாசாவும் கல்பாக்கம் மக்களுக்கு எதாவது 10 அம்ச திட்டம் வச்சி இருப்பாங்களே கொஞ்சம் எடுத்து விடுறது. 

#கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே.

பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம்!

தனித்தமிழ் ஈழத்திர்கான பொது வாக்கெடுப்பு, இனப்படுகொலை குறித்த சர்வதேச விசாரணை, ஈழ மக்களின் மறுவாழ்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களின் போராட்டம் போன்றதொரு போராட்டம் நம் கல்லூரி மாணவர்களாலும் முன்னெடுக்க பட வேண்டும். பொதுவாகவே பெரிய கல்லூரிகளின் படிக்க கூடிய மாணவர்கள் சமூக பிரச்சனைகளில் இருந்து தங்களை தூரப்படுத்தி கொள்ளும் போக்கு இனி மேலும் நமக்கு வேண்டாம். சக மாணவர்களின் போராட்டங்களில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டு அவர்களுடன் கூடி போராட நாம் நம்மை தயார் படுத்தி கொள்ள வேண்டும். தொழில் நுட்ப ரீதியாக நம் கை மேலோங்கியிருக்க கூடிய நிலையில் நாம் கையிலெடுக்க கூடிய சமூக பிரச்சனைகள் தீர்வுகளை நோக்கி வேகமாக பயணிக்க கூடும். பொருள் சார்ந்த சிந்தனைகள் மனிதர்களான நம் உணர்வுகளை மழுங்கடித்து விடாது என்பதை நிரூபிப்போம். மிக பெரியதொரு சமூக எழுச்சிக்காக உங்கள் 
சிந்தனைகளையும் உணர்வுகளையும் கூர்மைப்படுதுங்கள். 

வெடிப்புற பேசுவோம், வீரியம் பெருக்குவோம், வையத்தலைமை கொள்வோம், பாரதியின் பிள்ளைகளாய் எழுவோம். 

#ஈழம் என்றல்ல அனைத்து சமூக பிரச்சனைகளிலும், சக மனிதனாய் எழுவோம். சமூக மாற்றத்தை துரிதப்படுத்துவோம். அரசியலை மாற்றியமைப்போம்.

Tuesday, November 6, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 6!



அறிவியல் வளர்ச்சி என்பது  என்ன ?

மக்களின் அடிப்படை தேவைகளுக்கான கண்டுபிடிப்புகள், சமகால பிரச்சனைகளுக்கான தீர்வுகள், இயற்கைக்கும் , மனிதத்திற்கும்  பக்க விளைவுகள் ஏற்படுத்தாத வகையிலான மாற்று கண்டுபிடிப்புகள் ஆகியவையா அல்லது அறிவியல் தன்னை தானே கண்டுபிடித்து வளர்த்து கொள்வதா? 

அறிவியல் சார்ந்து சிந்திக்க கற்று கொண்டுள்ள அறிவியல் வல்லுனர்களுக்கு  மனிதம் சார்ந்து சிந்திக்க கற்று கொடுக்கப்பட்டுள்ளதா!

வியாபார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறப்பாக செயல்பட தெரிந்த பெரும்பாலான அறிவியல் வல்லுனர்களுக்கு இயற்கைகாகவும் மனிதத்திர்காகவும் சிந்திக்க நேரம் இல்லாமல் போய் விட்டதா?

முடிந்தால் சிந்தியுங்கள்! 

கிருஷ்ணர் பார்பனன், நரகாசுரன் நம் இனத்தவன்!

ஆஹா அடுத்து ஒரு புது பூதம் கிளம்பி தயாரா இருக்கு!

கிருஷ்ணர் பார்பனன், நரகாசுரன் நம் இனத்தவன் - கிருஷ்ணரே இல்லன்னு சொல்ற பலரே இதை பகிர்ந்து கொண்டிருக்கிறது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வளவு தானா உங்க டக்கு! பகுத்தறிவு என்பது இது தான் போல! 

யப்பா சாமிகளா உங்க பார்ப்பன எதிர்ப்பை கொஞ்சமாவது அர்த்தத்தோட செய்யுங்க. கண்மூடி தனமா இப்படி பிரச்சாரம் செஞ்சிங்கனா நீங்கள் பார்பனர்கள் மேல வைக்கிற நியாயமான
குற்றச்சாட்டுக்கள் கூட அநியாயாமா தான் தோனும். சமகால பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காணனும்னு யோசிக்க ஆரம்பிங்க, அத விட்டுட்டு தொட்டதுக்கு எல்லாம் பார்பனன் பார்பனனே பேசிக்கிட்டு திரிஞ்சா இன்னும் ஒரு ஆயிரம் வருஷத்துக்கு இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான்.

# பிராமணம் என்று கூறி கொண்டு தீட்டு பார்பவனும், தலித் என்று சொல்லி கொண்டு அனைத்து பிராமணனையும் தீட்டாக பார்பவனும் எந்த விதத்தில் வேறுபட்டவன்? பிரச்சனை தெரிந்தோ, தெரியாமலோ ஒட்டி கொண்டு இருக்கும் ஜாதியில் இல்லை; பிற அடையாளங்களோடு உள்ளவனிடம் ஒட்டாமல் இருக்கும் மனங்களில் தான் உள்ளது!

Wednesday, October 31, 2012

தமிழக காங்கிரஸின் ராஜதந்திரம் !




அப்போ:

நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம்!

இப்போ:

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் தொடர்பாக தமிழக காங்கிரஸ்  சார்பில் அனுப்ப பட்ட மின்னஞ்சல் செய்தியில் இந்திரா காந்தி என்பதற்கு பதிலாக  இந்திய மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உயிரை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னை சோனியா காந்தி பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது!  

#நாலணா செலவில்லாமல் நாலாயிரம் விளம்பரம் தேடி கொள்கிற தமிழக காங்கிரஸின் ராஜதந்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது!

க க க போ!

நீடூழி வாழ்க "So Called ஜனநாயகம்!



இனி அரசியல்வாதிகளின் சொம்பு தூக்கிகள், ஆதிக்க ஜாதியினர், அதிகார வர்கத்தினர், பணம் படைத்தவர்கள் மட்டும் தங்கள் கருத்துகளை சமூக இணையத்தில் பதியலாம். மற்றவர்கள் இங்கே கடையை சாத்தி விட்டு பழையபடி குட்டி சுவத்தையோ, டீ கடை பெஞ்சையோ தேடி கொள்ளுங்கள், இல்லையேல் சுழிய குற்றத்திற்காக கலி தின்று கொண்டிருக்கும் தோழர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சிறப்பு பயிற்சி எடுத்து கொள்ளுங்கள்!


#நீடூழி வாழ்க "So Called ஜனநாயகம்!

நோயும், பேயும்!

செய்தி: விவசாயிகளின் பரிதாப நிலையை போக்கவே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - அன்னை சோனியா ! 

தாய்நாட்டு நோயை போக்குவதற்கு அந்நிய நாட்டு பேயை இறக்குமதி செய்தானாம் ஒருத்தன்! 
இதையும் கேட்டு ஓகோ அப்படின்னு சொல்லி அமைதியா போறவன் உலக மகா கிறுக்கன்! 

http://hillpost.in/2012/10/22/fdi-in-retail-to-benefit-farmers-sonia-gandhi/53116/people/hp_bureau

முடிந்தால் சிந்தியுங்கள் - 5!

பார்ப்பனிய எதிர்ப்பு  என்பது "பார்ப்பனிய சிந்தனை" உடையவர்களை எதிர்ப்பதாக புரிந்து கொள்ள பட வேண்டும், அதை விட்டு பிறப்பால் பார்ப்பனனாக உள்ளவர்கள் அனைவரையும் எதிர்ப்பது மீண்டும் ஒரு சமூக அநீதிக்கே வழி வகுக்கும்.


முடிந்தால் சிந்தியுங்கள்!   

Friday, October 26, 2012

அரசியலும் வளர்ச்சியும்!

ஒரு தேரை இரண்டு குதிரைகள் இழுத்து செல்கின்றன, தேரின் இரு சக்கரங்களின் அருகிலும் மக்கள் கூட்டம், ஒரு சமயத்தில் ஒரு சக்கரத்தின் அச்சாணி கழன்று அந்த பக்கம் உட்காந்திருந்த மக்கள் உயிருக்காக மரண ஓலத்தை எழுப்பி கொண்டிருகிறார்கள். இரண்டு குதிரைகளும் மக்களின் மரண ஓலத்தை பொருட்படுத்தாமல் நிற்காமல் தறி கெட்டு ஓடி கொண்டிருகிறது.

இதில் ஒரு குதிரையின் பெயர் வளர்ச்சி, மற்றொன்றின் பெயர் அரசியல், ஒரு பக்கம்      அச்சாணி கழன்ற சக்கரம், மறு பக்கம் அச்சாணி கழலாத சக்கரம் என்பது பொருளாதார ஏற்ற தாழ்வு (இடைவெளி), அச்சாணி கழன்ற பக்கத்தின் உட்கார்ந்திருந்த மக்கள் இந்தியாவின் BPL (Below Poverty Line) என வரையறுக்க படும் வாழ்வதற்கும் வழி தெரியாமல், சாவதற்கும் அனுமதிக்க படாமல் தினம் தினம் மரண ஓலத்துடன் வாழ்கையை சந்திக்கும் அப்பாவிகள்.

#இந்த நிலையை புரிந்து கொள்ளாமல் அரசியல் பற்றியோ, சமுகம் பற்றியோ, வளர்ச்சி பற்றியோ பேசுவது எந்த விதத்திலும் பலன் தராது.

Wednesday, October 24, 2012

வளர்ச்சி!

நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதற்கும் வழி தெரியாமல், சாவதற்கும் அனுமதிக்கபடாமல், விரக்தியுடன், நடை பிணமாக வாழ்வதற்கு பெயர் தான் வளர்ச்சி.

மின்னலும், இடியும் !

ஆயிரம்  கோடி கோளாரிருக்க அவையனைத்தை விட்டு இதை மட்டும் நோக்கும் இவன் பொய்யன் என்றாய் -
ஆயிரம் ஆயிரம் நானிருக்க அவனையெல்லாம் விட்டு என்னை மட்டும் நோக்கும் நீ!
உன்னிடம் அதிகம் பேச ஒன்றும் இல்லை, 
ஆயிரம் கோடி ஆண்டு அறியாமை வரலாற்றின் இன்றைய எச்சம் தான்  நீ!

ஆயிரம் கோடி துளி விஷத்துளிகளில் எதன் வீரியம் அதிகம்?   
நீ உட்கொண்டது உனக்கானது, நான் உட்கொண்டது எனக்கானது!
ஆயிரம் கோடி கோளாறில் எதன் பாதிப்பு அதிகம்?
நீ உணர்ந்தவை உனக்கானது, நான் உணர்ந்தவை எனக்கானது! 

மின்னலும், இடியும் ஒன்றாம் - 
ஆனால் அதை பார்ப்பதும் கேட்பதும் ஒட்டமறுக்கிறது!
நான் பார்ப்பது என்னை உந்தி தள்ளுகிறது - 
கேட்பவைகள் என்னுள் புகுந்து கொள்ளு(ல்லு)கிறது,
உந்திய விசைகள் என்னை நடத்துகிறது - 
புகுந்தவை என்னுள் நடக்கிறது,
நான் பார்த்தவைகள் என்னை நடத்தியதை போல -
அவன் அவன் பார்த்தது அவன் அவனை நடத்தினால் போதாதோ? 

#சமூக பிரச்சனைகளை அணுகுதல்!

எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!

அழிவின் மொத்தம் என்றேன் - நாட்டின் பாதுகாப்பு என்றாய்,
மனிதத்தை சிதைக்கும் என்றேன் - அறிவியல் வளர்ச்சி என்றாய்,
எதிர்காலத்தை தொலைப்போம் என்றேன் - பொருளாதார எழுச்சி என்றாய்,
நோயுற்று சாவோம் என்றேன் - மின்விசிறி ஓடவேண்டும் என்றாய்,
எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!

Wednesday, October 10, 2012

மாற்று அரசியல் !

அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புரிதல் மக்களிடம் அந்நியப்பட்டு போய் விட்டது. அரசியல் மற்றும் சமூகம் இன்றி தனி மனிதனாக யாரும் வாழ்ந்து விட முடியாது என்ற உண்மையை மக்கள் உணர ஆரம்பித்தாலன்றி அரசியல் நிலைபெறாது. கேள்விகளில்லாத விடைகள் அர்த்தமற்றவை, முதலில் கேட்க பழகுவோம், நமக்காக மட்டும் அல்ல, அனைவருக்காகவும், புரிதலை வளர்த்து கொள்வோம், சித்தாந்தங்களை வகுத்து கொள்வோம், தவறுகளை திருத்தி கொள்வோம், பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விவாதிப்போம், மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்போம், அரசியல் மாற்றத்தை மட்டுமே கண்டுணர்ந்த சமூகத்தை மாற்று அரசியலையும் காண செய்வோம்!

Friday, September 28, 2012

அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்!



  • அந்நிய கம்பெனிகளுக்கு அடிமாடுகளாக தன்னையே தாரை வார்த்து விட்டு, குளிர் சாதன அறையில் உட்கார்ந்து நாட்டின் வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படும் தொலை நோக்கு சிந்தனையாளர்களே,
  • வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு அநாதை இல்லத்திற்கு சென்று குத்தாட்டம் போட்டு தங்கள் சமூக பொறுப்புகளை நிறைவேற்றி விட்ட திருப்தியுடன் வெளியே வருகிற சமூக சேவகர்களே,
  • வீட்டை சுத்தமாக வைப்பதற்காக அனைத்து குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பாதுகாப்பாக வெளியே போடுகின்ற இயற்கை ஆர்வலர்களே,
  • பத்திரிகையில் எழுதப்படுகின்ற முதன்மை செய்திகளும், தலையங்கங்களும் மட்டும் தான் அரசியல் என்று நம்பும் அரசியல் வித்தகர்களே,
  • வீட்டில் உள்ள ஜன்னல், கதவு அனைத்தையும் அடைத்து, ஆல் அவுட் போட்டு, கொசு வலைக்குள் புகுந்து கொள்ளும் அசகாய சூரர்களே,
  • "தொழில்நுட்பம் மட்டும் தான் வளர்ச்சி"; என்று அடித்து சொல்லும் அகராதியை தலைமை பாடமாக மனனம் செய்து விட்டு வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களே; அறிவியல் அறிஞர்களே,
  • மக்கள் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை உணர்ந்து கொள்ள மெனக்கெடாமல், மனதில் தோன்றிய சிந்தனைகள் அனைத்தையும், அதிகம் சாப்பிட்டு  வாந்தி எடுக்க துடிக்கும் டாஸ்மாக் குடிகாரன் போல, அதிகம் சிந்தித்ததை அப்பாவி மக்கள் மேல் செயல்படுத்த துடிக்கும் விஞ்ஞானிகளே,
  • பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு விழுந்திருந்தாலே எதோ கூகிள் நியூஸ் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு ஒதுங்கி போற ஈர நெஞ்சுகாரர்களே,
  • தன் வீட்டு ஏ.சி ஓடவில்லை என்றாலும் அதற்கு அணு எதிர்ப்பாளர்களும், அந்நிய சக்திகளும் தான் காரணம் என்ற உண்மையை இம்மி பிசகாமல் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கும் துப்பறியும் சிங்கங்களே,
  • எனக்கென்ன, எனக்கென்ன, எவன் செத்தா எனக்கென்ன, எவன் பொழச்சா எனக்கென்ன என்பதை மனசாட்சியின் காலர் டியுனாக வைத்து இருக்கும் அதி உத்தமர்களே,
  • கடைசியாக, அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் தாங்கள் சந்திக்கும் அனைவரும் தங்களை போலவே ரொம்ப நல்லவர்கள் என்ற நினைப்பில் எடுத்தார் கைப்பிள்ளையாக, சூது வாது தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்பாவிகளே அன்பர்களே,

நீங்கள் எல்லாரும் ஒன்னா  சேர்ந்து, 

"அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்"

"மின்சாரத்திற்கு எதற்கு சிக்கனம், அணு மின் நிலையம் வேண்டும் இக்கணம்"

" வீட்டிற்கு ஒரு அணு மின் நிலையம் வைப்போம், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் விற்போம் "

போன்ற பல்வேறு அம்ச திட்டங்களை முன் வைத்து, வீதியில் இறங்கி, அரசாங்கத்திடம் போராடி, விஞ்ஞானிகளிடம் மன்றாடி, உங்கள் வீட்டு தோட்டத்தில், மொட்டை மாடியில், கார் பார்க்கிங்கில், பரணையில், கக்கூஸில், விவசாய நிலங்களில், தெரு முனையில் மற்றும் உங்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் அணு உலைகளை நிறுவி அதில் இருந்து தயாராகும் மின்சாரத்தை முழுவதுமாக ஏப்பம் விட்டு கொள்ளுங்கள், உங்களை யாரும் ஒன்றும் கேட்க மாட்டோம், உங்கள் போராட்த்தின் வெற்றிக்காக, நாங்களும், உங்களின் தோளோடு தோள் நின்று, இறுதி வரை போராடுகிறோம். 

ஜெய் ஹிந்த்!

பின் குறிப்பு: பக்கத்து இலைக்கு பாயசம் ஊத்த சொன்னா பரவாயில்ல பாஸ், பாய்சன் இல்ல ஊத்த சொல்றீங்க, கொஞ்சம் யோசிங்க அடுத்து உங்க இலை தான்! 


Sunday, September 23, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 4


உங்கள் விருப்பம், சமூக நோய்களுக்கு வலி நிவாரணிகளை தயார் செய்வது என்றால் சமூக தொண்டாற்றுங்கள், அதை முற்றிலுமாக குணமாக்குவது என்றால் அரசியலில் இணையுங்கள். "Politics is the last refugee of the scoundrels" "அயோக்கியர்களின் இறுதி அடைக்கலம் அரசியல்" என்று அரசியலை ஒதுக்கி வைத்து பார்ப்பது அடிமாடுகளாக வாழ்வதை போன்றது. 

பட்ட மரங்களாக, பல நூறு ஆண்டுகள் மண்ணில் நின்று கொண்டிருப்பதை விட, வீரியமிக்க இளம் விதைகளாக மண்ணிற்குள் புதைக்கபடுவது உத்தமம். 

முடிந்தால் சிந்தியுங்கள்! 

Tuesday, September 18, 2012

அணு உலை பொய்களின் தொகுப்பு - 1!


உலகெங்கிலும் அணு உலைகளை மையமாக வைத்து கூறப்படும் பொய்களின் தொகுப்பு. சிந்திக்க தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைகிறேன். 

1 . அணு உலைகளில் இருந்து கதிர் வீச்சு அபாயம் இல்லை 

2 . கவலை படாதீர்கள், செர்னோபில் கதிர்வீச்சு அபாயம் பிரெஞ்சு எல்லைகளுக்குள் இருந்து சென்று விட்டது: அனைத்து பிரஞ்சு நாளிதழ்களும் 1986 'ல் பதிவு செய்தது.

3 . மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு வசதியும் பொய்யானதில்லை: செர்னோபில் பேரழிவு ஏற்பட்டு கொண்டிருக்கும் போது ஒரு அறிவாளி சொல்லியது

4 . கதிர்வீச்சை பற்றி பயப்பட வேண்டியதில்லை, உங்கள் ஜன்னல்களில் பேப்பர்களை கொண்டு அடைத்து விடுங்கள் அதுவே போதும்

5 . நீங்கள் சிரித்து கொண்டு இருந்தால் கதிர்வீச்சு உங்களை ஒன்றும் செய்யாது : யமஷிட்டா

6 . அணு சக்தி அமைதிக்கானது

7 . அணு சக்தி என்பது பாதுகாப்பான, சுத்தமான, மலிவான ஒரு தொழில் நுட்பம்

- தொடரும்

ஜனரேஷன்!

ஒரு நண்பனுடன் சாட்டில் உரையாடி கொண்டிருக்கும் போது கேட்டான், 
ஏன் அணு உலையை எதிர்கிறாய் என்று? புகுஷிமா என்ற வார்த்தையை சொல்ல ஆரம்பித்தான், அது முதல் ஜனரேஷன், இது முன்றாம் ஜனரேஷன் என்றான் உடனடியாக, நினைத்து கொண்டேன் 2030 'ல் எங்கோ அணு உலைக்கு எதிராக மக்கள் போராடி கொண்டிருக்கும் போது என் நண்பனை போலவே வேறொருவன் அந்த மக்களை பார்த்து சொல்வான் அது முன்றாம் ஜனரேஷன், இது ... 

வளர்ச்சி எனும் கண்ணாம்பூச்சி!


மனித தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க தெரிந்தவன், அந்த தவறால் பிரிந்த உயிரின் வலியையும், சிதைந்த உயிரின் வேதனையையும், பிரிந்த   குடும்பங்களின் துயரத்தையும் என்றுமே உணருவதில்லை. 
சிலரின் வளர்ச்சி என்ற கண்ணாம்பூச்சி விளையாட்டில் பலரின் வீழ்சிகள் ஒளிக்கபடுகின்றன!