Showing posts with label சும்மா. Show all posts
Showing posts with label சும்மா. Show all posts

Wednesday, June 12, 2013

விதையிலுருந்து மரம்!

பாபநாசத்தில் பூவுலகின் நண்பர்கள் நடத்திய விதையிலுருந்து மரம் பயிற்சி பட்டறை இயற்கையின் மீதான காதலை மேலும் தீவிரப்படுத்தி விட்டது.

சென்னை திரும்பிய நிமிடத்திலிருந்தே அடுத்து எப்படா இப்படி இயற்க்கையோடு கொஞ்சி, குலாவி காதலை வளர்ப்பது என ஏக்கமாக இருக்கிறது; பூகம்பமே வந்தாலும் எட்டு மணி வரை அசையாத ஒருவன் (வேற யாரு நான் தான்) இப்படி நாலு மணிக்கே எழுந்து உக்காந்து விட்டத்த பார்த்து  யோசிச்சா என்ன அர்த்தம் ?! - பியார் முத்தி போச்சு.

#உண்மை காதலுக்கு உதவ காத்திருப்போர் கவனத்திற்கு!

பின் குறிப்பு: எனக்கு தெரிஞ்சு இன்னும் இயற்க்கைன்னு எல்லாம் எந்த பொண்ணுக்கும் பேர் வைக்கல - எதையாவது கெளப்பி விட்டுடாதிங்க பாஸ்.

Wednesday, October 31, 2012

தமிழக காங்கிரஸின் ராஜதந்திரம் !




அப்போ:

நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம்!

இப்போ:

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் தொடர்பாக தமிழக காங்கிரஸ்  சார்பில் அனுப்ப பட்ட மின்னஞ்சல் செய்தியில் இந்திரா காந்தி என்பதற்கு பதிலாக  இந்திய மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உயிரை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னை சோனியா காந்தி பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது!  

#நாலணா செலவில்லாமல் நாலாயிரம் விளம்பரம் தேடி கொள்கிற தமிழக காங்கிரஸின் ராஜதந்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது!

க க க போ!

என்ன வாழ்கைடா இது!


WTF, HOLY SHIT எல்லாம் "சோ கால்ட் மேட்டு குடியினர்" போகிற போக்கில சொல்லிட்டு போயிடலாம். ஆனா அதையே தமிழுல சொன்னா நாம அயோக்கியன்! 

#என்ன வாழ்கைடா இது!

அட்வைஸ் செய்து வாங்கி கட்டி கொள்ளாமல் இருக்க!

இருபத்தி நாலு மணி நேரமும் டி வி, பாட்டு, படம், பேஸ்புக்னு எதாவது ஒரு போதையிலயே அடிமையாகி கிடக்காதீங்க, அளவோட என்ஜாய் பண்ணுங்க, மத்த பிரச்சனைகளை பத்தியும் தெரிஞ்சிகோங்க அப்படின்னு தெரியாத்தனமா கூட யாருகிட்டயும் சொல்லிடாதீங்க!!  அப்பறம் சாடிஸ்ட், உலகம் தெரியாதவன், ரசனை இல்லாதவன், குறுகிய மனப்பான்மை உடையவன், மன நோயாளி, சைக்கு, புத்தி கேட்டவன், துப்பு கேட்டவன், பொறாமை புடிச்சவன், சுயநலவாதி, மத்தவங்க சந்தோஷத்த கெடுக்கிறவன், கொடுங்கோலன் இன்னும் பல சொல்ல கூடாத வார்த்தைகளில் எல்லாம் வாங்கி கட்டி கொள்ள வேண்டி வரும்
#பார்த்து சூதானமா நடந்துக்கோங்க!