Showing posts with label அனுபவ பாடம். Show all posts
Showing posts with label அனுபவ பாடம். Show all posts

Wednesday, June 12, 2013

விதையிலுருந்து மரம்!

பாபநாசத்தில் பூவுலகின் நண்பர்கள் நடத்திய விதையிலுருந்து மரம் பயிற்சி பட்டறை இயற்கையின் மீதான காதலை மேலும் தீவிரப்படுத்தி விட்டது.

சென்னை திரும்பிய நிமிடத்திலிருந்தே அடுத்து எப்படா இப்படி இயற்க்கையோடு கொஞ்சி, குலாவி காதலை வளர்ப்பது என ஏக்கமாக இருக்கிறது; பூகம்பமே வந்தாலும் எட்டு மணி வரை அசையாத ஒருவன் (வேற யாரு நான் தான்) இப்படி நாலு மணிக்கே எழுந்து உக்காந்து விட்டத்த பார்த்து  யோசிச்சா என்ன அர்த்தம் ?! - பியார் முத்தி போச்சு.

#உண்மை காதலுக்கு உதவ காத்திருப்போர் கவனத்திற்கு!

பின் குறிப்பு: எனக்கு தெரிஞ்சு இன்னும் இயற்க்கைன்னு எல்லாம் எந்த பொண்ணுக்கும் பேர் வைக்கல - எதையாவது கெளப்பி விட்டுடாதிங்க பாஸ்.

Wednesday, April 3, 2013

உணர்வுகளின் எழுச்சி!

பொய் பிரச்சாரங்களும், போலி குற்றச்சாட்டுகளும் உணர்வுகளை எழுச்சி பெற செய்யுமே தவிர வீழ்த்தி விடாது. 

#கூடங்குளம்!

Friday, November 30, 2012

அனுபவ பாடம் - 2!


இயந்தரமயமாகி  விட்ட வாழ்கை பயணத்தில் சிந்தனைக்கான சாத்தியகூறுகள் அழித்து ஒழிக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், அறிவியல், அரசியல் போன்ற பொருள் சார்ந்த சிந்தனைகள் மனித உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று பணத்திற்காகவும், பெட்ரோலுக்காகவும் ஓடும் வாடகை வண்டி போல பொருளாதரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் ஓடும் மனித இயந்திரங்களை உருவாக்கி வருகின்றது.

 மனிதம் பட்டு போய் விடாமல் தழைக்க பொருள் சார்ந்த சிந்தனைகளுக்கு வேக தடைகள் அவசியமாகின்றன. என் அனுபவத்தில் நீண்ட தனிமை பயணங்கள் ஒரு மிக சிறந்த வேக தடையாக செயல்படுகின்றதுசில மணி நேர பேருந்து, ரயில் பயணங்களில் சிந்தனைகள் சிறிய விதைகளாக விதைக்கப்பட்டு, துளிர் விட்டு விருட்சமாகி விடுகின்றன, அதை போன்று உருவான சிந்தனை  விருட்சங்கள் என் வாழ்கை பயணத்தை பலவாறு மாற்றி அமைத்து உள்ளது.

வாழ்கை பயணத்தை செம்மையாகவும், ருசிகரமானதாகவும் அமைத்து கொள்ள பயணங்கள் அவசியமாகின்றன. வேக தடைகள் தானாக உருவாவதற்காக காத்திருக்காமல் வாய்ப்பு கிடைக்கும் போது உருவாக்கி கொள்ளுங்கள், நீண்ட தனிமை  பயணங்களாக.

உங்கள் அனுபவம் கூறும் வேக தடைகளையும் தெரியபடுத்துங்கள்.