Showing posts with label அணு எதிர்ப்பு கருத்துகள். Show all posts
Showing posts with label அணு எதிர்ப்பு கருத்துகள். Show all posts

Wednesday, April 3, 2013

கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே!

நம்ம கனவு வியாபாரியும், நாசாவும் கல்பாக்கம் மக்களுக்கு எதாவது 10 அம்ச திட்டம் வச்சி இருப்பாங்களே கொஞ்சம் எடுத்து விடுறது. 

#கேக்குறவனுக்கு கொடுக்க மாட்டிங்களே.

உணர்வுகளின் எழுச்சி!

பொய் பிரச்சாரங்களும், போலி குற்றச்சாட்டுகளும் உணர்வுகளை எழுச்சி பெற செய்யுமே தவிர வீழ்த்தி விடாது. 

#கூடங்குளம்!

Wednesday, October 24, 2012

எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!

அழிவின் மொத்தம் என்றேன் - நாட்டின் பாதுகாப்பு என்றாய்,
மனிதத்தை சிதைக்கும் என்றேன் - அறிவியல் வளர்ச்சி என்றாய்,
எதிர்காலத்தை தொலைப்போம் என்றேன் - பொருளாதார எழுச்சி என்றாய்,
நோயுற்று சாவோம் என்றேன் - மின்விசிறி ஓடவேண்டும் என்றாய்,
எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!

Friday, September 28, 2012

அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்!



  • அந்நிய கம்பெனிகளுக்கு அடிமாடுகளாக தன்னையே தாரை வார்த்து விட்டு, குளிர் சாதன அறையில் உட்கார்ந்து நாட்டின் வளர்ச்சியை பற்றி அதிகம் கவலைப்படும் தொலை நோக்கு சிந்தனையாளர்களே,
  • வருடத்திற்கு ஒரு முறை ஏதாவது ஒரு அநாதை இல்லத்திற்கு சென்று குத்தாட்டம் போட்டு தங்கள் சமூக பொறுப்புகளை நிறைவேற்றி விட்ட திருப்தியுடன் வெளியே வருகிற சமூக சேவகர்களே,
  • வீட்டை சுத்தமாக வைப்பதற்காக அனைத்து குப்பைகளையும் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பாதுகாப்பாக வெளியே போடுகின்ற இயற்கை ஆர்வலர்களே,
  • பத்திரிகையில் எழுதப்படுகின்ற முதன்மை செய்திகளும், தலையங்கங்களும் மட்டும் தான் அரசியல் என்று நம்பும் அரசியல் வித்தகர்களே,
  • வீட்டில் உள்ள ஜன்னல், கதவு அனைத்தையும் அடைத்து, ஆல் அவுட் போட்டு, கொசு வலைக்குள் புகுந்து கொள்ளும் அசகாய சூரர்களே,
  • "தொழில்நுட்பம் மட்டும் தான் வளர்ச்சி"; என்று அடித்து சொல்லும் அகராதியை தலைமை பாடமாக மனனம் செய்து விட்டு வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் தொழில் நுட்ப வல்லுனர்களே; அறிவியல் அறிஞர்களே,
  • மக்கள் மற்றும் சமூகத்திற்கு ஏற்படும் நன்மை, தீமைகளை உணர்ந்து கொள்ள மெனக்கெடாமல், மனதில் தோன்றிய சிந்தனைகள் அனைத்தையும், அதிகம் சாப்பிட்டு  வாந்தி எடுக்க துடிக்கும் டாஸ்மாக் குடிகாரன் போல, அதிகம் சிந்தித்ததை அப்பாவி மக்கள் மேல் செயல்படுத்த துடிக்கும் விஞ்ஞானிகளே,
  • பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு விழுந்திருந்தாலே எதோ கூகிள் நியூஸ் ல பார்த்த மாதிரி இருக்கேன்னு ஒதுங்கி போற ஈர நெஞ்சுகாரர்களே,
  • தன் வீட்டு ஏ.சி ஓடவில்லை என்றாலும் அதற்கு அணு எதிர்ப்பாளர்களும், அந்நிய சக்திகளும் தான் காரணம் என்ற உண்மையை இம்மி பிசகாமல் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கும் துப்பறியும் சிங்கங்களே,
  • எனக்கென்ன, எனக்கென்ன, எவன் செத்தா எனக்கென்ன, எவன் பொழச்சா எனக்கென்ன என்பதை மனசாட்சியின் காலர் டியுனாக வைத்து இருக்கும் அதி உத்தமர்களே,
  • கடைசியாக, அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள் மற்றும் தாங்கள் சந்திக்கும் அனைவரும் தங்களை போலவே ரொம்ப நல்லவர்கள் என்ற நினைப்பில் எடுத்தார் கைப்பிள்ளையாக, சூது வாது தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் அப்பாவிகளே அன்பர்களே,

நீங்கள் எல்லாரும் ஒன்னா  சேர்ந்து, 

"அணு மின் நிலைகள்; நாட்டின் உயிர் மின் நிலையங்கள்"

"மின்சாரத்திற்கு எதற்கு சிக்கனம், அணு மின் நிலையம் வேண்டும் இக்கணம்"

" வீட்டிற்கு ஒரு அணு மின் நிலையம் வைப்போம், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் விற்போம் "

போன்ற பல்வேறு அம்ச திட்டங்களை முன் வைத்து, வீதியில் இறங்கி, அரசாங்கத்திடம் போராடி, விஞ்ஞானிகளிடம் மன்றாடி, உங்கள் வீட்டு தோட்டத்தில், மொட்டை மாடியில், கார் பார்க்கிங்கில், பரணையில், கக்கூஸில், விவசாய நிலங்களில், தெரு முனையில் மற்றும் உங்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் அணு உலைகளை நிறுவி அதில் இருந்து தயாராகும் மின்சாரத்தை முழுவதுமாக ஏப்பம் விட்டு கொள்ளுங்கள், உங்களை யாரும் ஒன்றும் கேட்க மாட்டோம், உங்கள் போராட்த்தின் வெற்றிக்காக, நாங்களும், உங்களின் தோளோடு தோள் நின்று, இறுதி வரை போராடுகிறோம். 

ஜெய் ஹிந்த்!

பின் குறிப்பு: பக்கத்து இலைக்கு பாயசம் ஊத்த சொன்னா பரவாயில்ல பாஸ், பாய்சன் இல்ல ஊத்த சொல்றீங்க, கொஞ்சம் யோசிங்க அடுத்து உங்க இலை தான்! 


Tuesday, September 18, 2012

அணு உலை பொய்களின் தொகுப்பு - 1!


உலகெங்கிலும் அணு உலைகளை மையமாக வைத்து கூறப்படும் பொய்களின் தொகுப்பு. சிந்திக்க தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் என நினைகிறேன். 

1 . அணு உலைகளில் இருந்து கதிர் வீச்சு அபாயம் இல்லை 

2 . கவலை படாதீர்கள், செர்னோபில் கதிர்வீச்சு அபாயம் பிரெஞ்சு எல்லைகளுக்குள் இருந்து சென்று விட்டது: அனைத்து பிரஞ்சு நாளிதழ்களும் 1986 'ல் பதிவு செய்தது.

3 . மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு வசதியும் பொய்யானதில்லை: செர்னோபில் பேரழிவு ஏற்பட்டு கொண்டிருக்கும் போது ஒரு அறிவாளி சொல்லியது

4 . கதிர்வீச்சை பற்றி பயப்பட வேண்டியதில்லை, உங்கள் ஜன்னல்களில் பேப்பர்களை கொண்டு அடைத்து விடுங்கள் அதுவே போதும்

5 . நீங்கள் சிரித்து கொண்டு இருந்தால் கதிர்வீச்சு உங்களை ஒன்றும் செய்யாது : யமஷிட்டா

6 . அணு சக்தி அமைதிக்கானது

7 . அணு சக்தி என்பது பாதுகாப்பான, சுத்தமான, மலிவான ஒரு தொழில் நுட்பம்

- தொடரும்

ஜனரேஷன்!

ஒரு நண்பனுடன் சாட்டில் உரையாடி கொண்டிருக்கும் போது கேட்டான், 
ஏன் அணு உலையை எதிர்கிறாய் என்று? புகுஷிமா என்ற வார்த்தையை சொல்ல ஆரம்பித்தான், அது முதல் ஜனரேஷன், இது முன்றாம் ஜனரேஷன் என்றான் உடனடியாக, நினைத்து கொண்டேன் 2030 'ல் எங்கோ அணு உலைக்கு எதிராக மக்கள் போராடி கொண்டிருக்கும் போது என் நண்பனை போலவே வேறொருவன் அந்த மக்களை பார்த்து சொல்வான் அது முன்றாம் ஜனரேஷன், இது ... 

Friday, September 14, 2012

என் குல சாமி ஆவாரா கலாம்?



வெகு காலமாக அப்துல் கலாமை விமர்சித்ததற்காக பல பேரின் கண்டனத்திற்கு ஆளாகினேன், இருந்தாலும் அப்துல் கலாமை எப்படி நீ சொல்லலாம் என்ன திரும்ப பல அறிவு ஜீவிகள் பதிவுகளை போடுவதால் இந்த பதிவு!

கூடங்குளத்தில் உள்ள அணு உலைகளை அளிப்பது ரஷ்ய நாட்டை சேர்ந்த நிறுவனம், இன்று வரை அவர்கள் நாட்டில் தயாரித்த அணு உலையில் ஏற்பட கூடிய விபத்துக்கு பொறுபேற்க தயாராய் இல்லை, அப்படி இழப்பிடு தர வேண்டும் என்ற கட்டாயம் இருந
்தால் நாங்கள் இதை விற்க தயாராய் இல்லை என்பதை தெளிவு படுத்திய பின்பு வேறு வழி இல்லாமல் இந்திய மக்களின் வரி பணத்தின் மூலமாக இழப்பீடு கொடுத்து கொள்ளலாம் என்ற தான்றோன்றி தனமாக முடிவெடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியது, தயாரிப்பாளரே பிரச்சனைக்கு பொறுபேற்க விருப்பமில்லாத ஒரு தொழில் நுட்பத்திற்கு தான் நமது அறிவியல் ஞானி மாண்புமிகு திரு அப்துல் கலாம் அவர்கள் 100௦௦% பாதுகாப்பானது என்று உத்தரவாதம் கொடுத்திருகிறார், இதை அவர் ரஷ்ய கம்பெனியிடம் சொல்லி நமக்கு இழப்பிடு வாங்கி தரும் படி ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து இருந்தால் கூட அவரை தூக்கி வைத்து கொண்டாடி இருக்கலாம், சாதாரண மக்களிடம், அவரை ஒரு அறிவாளியாக, தலைவராக, ரோல் மாடலாக நினைக்கும் பல கோடி மக்களின் முன் சொல்கிறார் அணு உலை 100௦% பாதுகாப்பானது என்று! இதை நான் இரண்டு விதமாக பார்கிறேன், ஒன்று இதை கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு கோமாளியாக அப்துல் கலாம் இருக்கலாம், அப்படி இல்லை தன்னை நம்பி இருக்கும் மக்களை கோமாளியாக ஆக்கி காரியத்தை சாதித்து கொள்ள கூடிய ஒரு குள்ள நரியாக இருக்கலாம். ஆக அப்துல் கலாமை சாடுவதில் எந்த தவறும் இல்லை என்பதை இதன் மூலம் அப்துல்கலாமை தெய்வமாக நினைத்து கொண்டிருக்கும் அன்பிற்கினிய, அப்பாவி உள்ளங்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். உங்களை நான் பரிதாபப்பட்ட பிறவிகளாக தான் பார்க்கிறேனே தவிர எதிரியாக அல்ல.

பின் குறிப்பு:
இதற்கு கோபமாக பதில் பதிவு போட விரும்பும் நண்பர்களுக்கு, ரஷ்யாவிற்கு எங்கள் சொந்த பணத்தில் டிக்கெட் எடுத்து கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், அப்துல் கலாமுடன் நீங்களும் சென்று இந்திய மக்களுக்காக இழப்பிட்டை வாங்கி தந்து விட்டு உங்களால் எந்த அளவு என்னை கீழ்த்தரமாக திட முடியுமோ திட்டி கொள்ளுங்கள். உங்களையும், கலாமையையும் குல சாமியாக என் கடைசி மூச்சு வரை என் வீ
ட்டு பூஜை அறையில் வைத்து கும்புடுகிறேன்.

கம்யுனிஸ்டுகள் ஒன்றும் பச்சோந்திகள் அல்ல!



கம்யுனிஸ்டுகள், ஜெய்தாபுரில் இருக்கும் அணு மின் நிலையத்தை அழிவு திட்டமாகவும், கூடங்குளத்தில் இருக்கும் அணுமின் நிலையத்தை வளர்ச்சி திட்டமாகவும் பார்ப்பது எவ்வளவு நியாயமான ஒன்று என்று சில நிமிடங்களுக்கு முன்பு தான் புரிந்தது, அவர்களை பச்சோந்திகள் என பழிப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்க ஒன்று, அவர்கள் சொல்வது ரஷ்யாவில் உலை வாங்காமல் அவர்கள் பொருளாதரத்தை அழிக்கிறீர்கள், ரஷ்யாவில் உலை வாங்கி அவர்களை வளர்
கிறீர்கள் என்று, உங்கள் அறியாமையால் அவர்கள் இந்தியாவை பற்றி தான் பேசுகிறார்கள் என்று புரிந்து கொண்டால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்?
கம்யுனிஸ்டுகள் ஒன்றும் பச்சோந்திகள் அல்ல நண்பர்களே, பச்சை துரோகிகள்!
பின் குறிப்பு: சமுதாயம் மட்டும் நாட்டின் மீது அக்கறை உள்ள நல்ல கம்யுனிஸ்டுகள் மன்னிக்கவும், நான் உங்களை பற்றி பேசவில்லை..



இத கவிதைன்னு நான் சொல்லல!



கம்யூனிஸ்ட் கட்சிகளின் ரஷ்ய மோகம்,
இந்தியாவில் இவர்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச,
மோகத்தையும்,
அழித்து விடும்,
போல இருக்கிறதே! 
அடடே ...! 
பச்சோந்தி பயலுக! 
சத்தியமா இத கவிதைன்னு, 
நான் சொல்லல, 
ஒரே லைன்ல எழுதி, 
போர் அடிச்சிடுச்சு,
அதான் இப்படி,
கோப படாதீங்க...!



Thursday, September 13, 2012

காந்திய வழி!

தடியடியை தாங்கி கொண்டு காந்திய வழியில் போராடும் போராட்ட குழுவினர் ஒவ்வொருவரும் சுபாஷ் சந்திர போஸின் வீரமும், காந்தியின் மன திடத்தையும் உடையவர்கள். வெட்கமே இல்லாமல் வன்முறையை கட்டவிழ்க்கும் அரசும், காவல் துறையும் மனிதத்தின் அவமான சின்னங்கள்.

உதயகுமாரன்!



கிராமங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளையே அருவாளுடனும், நாட்டு தூப்பாக்கிகளுடனும், நாட்டு வெடிகுண்டுகளுடனும் அணுகும் மக்களை தடி அடிகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும், துப்பாக்கி குண்டுகளையும் வாங்கி கொண்டு அற வழியில் போராட பண்படுத்தி விட்ட சுப உதயகுமாரன் ஈடு இனையற்ற தலைவராக நெஞ்சில் நின்று விட்டார். இவரது கால் தூசிக்கு பெறாதவர்கள் முதலமைச்சராகவும், பிரதமராகவும் இருப்பது நமக்கு ஏற்படுள்ள சாப கேடு. பொய் பிரச்சாரங்கள் மூலமும், வன்முறை மூலமும் உண்மையாக்கபட்ட பொய்கள் என்றும் நிலைத்ததில்லை .

காட்டேரிகளின் கோமாளி தந்திரம்!

அச்சத்தை ஏற்படுத்தி அச்சத்தை போக்குவதற்கு பெயர் தான் ராஜதந்திரம் என்றால் அந்த தந்திரத்தை செயல்படுத்தும் ராஜா கோமாளியாகவும், காட்டேரியாகவும் தான் இருக்க முடியும்! வெட்க கேடு.

கூடங்குளம் அடக்குமுறை!




தனது கோர முகத்தை வெட்ட வெளிச்சமாக்கிய ஜெயலலிதாவுக்கும், பிணம் தின்னிகள் போல் செயல்பட்ட தமிழக காவல் துறைக்கும் ஒரு தனி மனிதனாக எனது தீவிரமான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். நண்பர்கள் அவர்கள் கண்டனங்களை நாகரீகமான முறையில் பதிவு செய்யவும்.

காவலர்களுக்கு பாதுகாப்பில்லை!



வெறும் கையுடன்,குழந்தைகளுடனும் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மக்களிடம் இருந்து, துப்பாக்கி, வெடி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள், கவச உடை, லத்தி அனைத்தையும் வைத்து கொண்டிருக்கும் காவலர்களுக்கு பாதுகாப்பில்லையாம்! கேட்கும் போதே ரத்தம் சூடாகிறது, உதயகுமாரன் போன்ற அகிம்சையை நம்ப கூடிய தலைவர்கள் மட்டும் இல்லை என்றால் எத்தனை காவலர்கள் உயிர் இழந்து இருக்க கூடும் என்பதை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. அகிம்சையை நம்பியவர்கள் தோற்றதில்லை, தூண்டுதலுக்கு ஆளாகாமல் அமைதி வழியில் தொடர்ந்து போராடுவோம். அரசாங்கம் மற்றும் உளவு துறையின் ராஜதந்திர முயற்சிகளை அமைதி வழியில் நின்று முறியடிப்போம், போது மக்களிடம் இருந்து நமக்கான ஆதரவை அதிகரிப்போம்.


அரசியல்வாதிகளின் பொய் பிரச்சாரங்கள்!



எக்கச்சமான உளவு பிரிவிகளையும், விசாரணை அமைப்புகளையும், ஆயுத படைகளையும் வைத்து கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகள், வெளி நாட்டு அமைப்புகள் மூலம் பணம் பெறுவதாக பிரச்சாரம் செய்து கொச்சைபடுத்தபடும் உதயகுமாருக்கு எதிராக எந்த வித ஆதாரத்தை இன்று வரை கொடுக்க முடியாததன் மூலமே தெரியும் அரசியல்வாதிகளின் குள்ளநரி தனத்தை. பொய் பிரச்சாரங்களை செய்கிறார் பிரதமர் என அவருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குக்கு இன்று வரை பதில் தர வில்லை. உண்மையை பேசுபவர்களை கொச்சை படுத்தி தங்கள் காரியத்தை சாதித்து கொள்ளும் கீழ்த்தனமான செயலை என்று அரசியல்வாதிகள் நிறுத்திகிறார்களோ அன்று தான் மக்கள் இந்திய அரசியல் வாதிகளையும், அரசியல் அமைப்பையும் நம்ப தொடங்குவார்கள்.


பதவி ஒரு கேடு!



தனது கட்சியை சேர்ந்த சொம்பு தூக்கிகள் இறந்தால் நீண்ட அறிக்கையின் மூலம் தனது இரங்கலையும், அவரது குடும்பத்துக்கு ஆதரவையும் தெரிவிக்கும் அம்மா, கொடூரமாக தடி அடி, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை குண்டுகள் போன்றவற்றை கையாண்டு கொன்ற ஒருவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்து சரி கட்டி ஒதுங்கி விட முயலுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடந்த அனைத்து அசம்பாவிதங்களுக்கும் முழுமையான பொறுப்பு அதை நடத்தியவர்களுக்கு தான் உண்டு என்பதை உணராதவருக்கு பதவி ஒரு கேடு.

சட்டத்தை செயல்படுத்த சட்டம்!

சுதந்திர போராட்டம் என்பது வெள்ளைகாரர்கள் நம்மை அடிமை படுத்திய காலம், தற்கால போரட்டங்கள் என்பது கொள்ளை காரர்கள் நம்மை அடிமைபடுத்தி கொண்டிருக்கும் காலம். பூவுலகின் நண்பர்கள் திரு சுந்தரராஜனின் கருத்து மிக நுண்ணியமானது, இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத்தை சட்டபடி நடக்க வைப்பதற்கே சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கிறது. அணு சக்தி கழகம் புகுஷிமா விபத்துக்கு பிறகு விதித்த 17 விதிகளை முழுவதுமாக செயல் படுத்தி விட்டு அணு உலையை செயல் படுத்துங்கள் என்று சொல்வதற்கே உயர் நீதி மன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர வேண்டி இருக்கிறது. 

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்.

நம்பிக்கையின் மிச்சம்!



கடலுக்குள் இறங்கி அமைதி வழியில் போராடும் இடிந்தகரை மக்கள்! பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று பாரபட்சமில்லாமல் ஜனநாயகத்தின் மீதான நம்பிகையை இன்னும் இழந்து விடாமல் போராடுவதை பார்க்கும் போதே சிலிர்கிறது!

Monday, September 10, 2012

அணு உலை போராட்டத்துக்கு எதிரான கபட நாடகம்!




ஏவுகணை தாக்குதலுக்கு ஒன்றும் ஆகாத அணு உலை, ஏரோப்ளேன் விழுந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, சுனாமி வந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, பூகம்பம் வந்தால் ஒன்றும் ஆகாத அணு உலை, நிராயுதபாணி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அருகில் சென்றாலே விபத்து ஏற்படும், பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் தடியடி நடத்தி முன்று உயிர்களை பலி வாங்கினோம், பல ஆயிரம் பேரை பழி வாங்கினோம்! வாழ்க இந்திய ஜனநாயகம்.

அன்புடன்,
வி. எஸ்.  வினோத் குமார்

மாய வலையா, சாப வலையா!


அணு உலை எதிர்பாளர்களின் மாய வலையில் யாரும் விழவில்லை, ஓட்டு பொறுக்கி அரசியல் வாதிகளின் சாப வலையில் தான் இந்திய மக்கள் விழுந்துள்ளனர். 

அன்புடன், 
வி. எஸ்.  வினோத் குமார்