Thursday, September 13, 2012

காவலர்களுக்கு பாதுகாப்பில்லை!



வெறும் கையுடன்,குழந்தைகளுடனும் அமைதியாக போராட்டம் நடத்தி வந்த மக்களிடம் இருந்து, துப்பாக்கி, வெடி குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள், கவச உடை, லத்தி அனைத்தையும் வைத்து கொண்டிருக்கும் காவலர்களுக்கு பாதுகாப்பில்லையாம்! கேட்கும் போதே ரத்தம் சூடாகிறது, உதயகுமாரன் போன்ற அகிம்சையை நம்ப கூடிய தலைவர்கள் மட்டும் இல்லை என்றால் எத்தனை காவலர்கள் உயிர் இழந்து இருக்க கூடும் என்பதை நினைத்து கூட பார்க்கமுடியவில்லை. அகிம்சையை நம்பியவர்கள் தோற்றதில்லை, தூண்டுதலுக்கு ஆளாகாமல் அமைதி வழியில் தொடர்ந்து போராடுவோம். அரசாங்கம் மற்றும் உளவு துறையின் ராஜதந்திர முயற்சிகளை அமைதி வழியில் நின்று முறியடிப்போம், போது மக்களிடம் இருந்து நமக்கான ஆதரவை அதிகரிப்போம்.


No comments:

Post a Comment