மனித உயிர்கள் மலிவாக பார்க்கப்படும் பொது இந்த சமுதாயத்தின் மீது கட்டுபடுத்த முடியாத ஒரு கோபம் வருகிறது. எனது வாழ்வை தீர்மானித்து கொள்ளும் உரிமை எனக்கு 200 % சதவிகிதம் இருக்கிறது, யாரும் மறுக்க முடியாது! ஆனால் எனது வளர்சிக்காக பிறர் வாழ்வாதரங்களை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? டினோசர்களும், காட்ஜில்லாக்களும், சுனாமியும், பூகம்பமும், எரிமலைகளும் இந்த உலகுக்கு ஏற்படுத்துவதாக திரை படங்களில் காட்டப்படும் அழிவை விட மனிதன் தன் சுய நலத்தின் மூலம் சிறிது சிறிதாக ஏற்படுத்தி வருகிறான். உலகின் முடிவு கண்டிப்பாக மனிதனால் தான் ஏற்பட போகிறது என்பதை சத்தியம் செய்து சொல்லலாம்.
மனிதன் முதலில் மனிதனாக வாழ கற்று கொள்ளட்டும், பிறகு அறிவியல் அறிஞ்சராகவோ, மருத்துவராகவோ, வக்கீலாகவோ என்னவாக வேண்டுமானாலும் ஆகி விட்டு போகட்டும்.
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்
No comments:
Post a Comment