Friday, October 26, 2012

அரசியலும் வளர்ச்சியும்!

ஒரு தேரை இரண்டு குதிரைகள் இழுத்து செல்கின்றன, தேரின் இரு சக்கரங்களின் அருகிலும் மக்கள் கூட்டம், ஒரு சமயத்தில் ஒரு சக்கரத்தின் அச்சாணி கழன்று அந்த பக்கம் உட்காந்திருந்த மக்கள் உயிருக்காக மரண ஓலத்தை எழுப்பி கொண்டிருகிறார்கள். இரண்டு குதிரைகளும் மக்களின் மரண ஓலத்தை பொருட்படுத்தாமல் நிற்காமல் தறி கெட்டு ஓடி கொண்டிருகிறது.

இதில் ஒரு குதிரையின் பெயர் வளர்ச்சி, மற்றொன்றின் பெயர் அரசியல், ஒரு பக்கம்      அச்சாணி கழன்ற சக்கரம், மறு பக்கம் அச்சாணி கழலாத சக்கரம் என்பது பொருளாதார ஏற்ற தாழ்வு (இடைவெளி), அச்சாணி கழன்ற பக்கத்தின் உட்கார்ந்திருந்த மக்கள் இந்தியாவின் BPL (Below Poverty Line) என வரையறுக்க படும் வாழ்வதற்கும் வழி தெரியாமல், சாவதற்கும் அனுமதிக்க படாமல் தினம் தினம் மரண ஓலத்துடன் வாழ்கையை சந்திக்கும் அப்பாவிகள்.

#இந்த நிலையை புரிந்து கொள்ளாமல் அரசியல் பற்றியோ, சமுகம் பற்றியோ, வளர்ச்சி பற்றியோ பேசுவது எந்த விதத்திலும் பலன் தராது.

No comments:

Post a Comment