Wednesday, October 10, 2012

மாற்று அரசியல் !

அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புரிதல் மக்களிடம் அந்நியப்பட்டு போய் விட்டது. அரசியல் மற்றும் சமூகம் இன்றி தனி மனிதனாக யாரும் வாழ்ந்து விட முடியாது என்ற உண்மையை மக்கள் உணர ஆரம்பித்தாலன்றி அரசியல் நிலைபெறாது. கேள்விகளில்லாத விடைகள் அர்த்தமற்றவை, முதலில் கேட்க பழகுவோம், நமக்காக மட்டும் அல்ல, அனைவருக்காகவும், புரிதலை வளர்த்து கொள்வோம், சித்தாந்தங்களை வகுத்து கொள்வோம், தவறுகளை திருத்தி கொள்வோம், பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விவாதிப்போம், மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்போம், அரசியல் மாற்றத்தை மட்டுமே கண்டுணர்ந்த சமூகத்தை மாற்று அரசியலையும் காண செய்வோம்!

No comments:

Post a Comment