Thursday, January 19, 2012

வாழ்க ஜனநாயகம்!


பிறப்பால் ஜனநாயக இந்தியாவின் தவபுதல்வர்கள் நாம், வாழ்வதோ காங்கிரஸ் என்ற துப்பு கெட்ட, ஆண்மை அற்ற, வக்கிர புத்திகாரர்களின் கூட்டமைப்பின் ராணுவ ஆட்சியில்; மரியாதையைக்குறிய அடிமைகளாக! வெள்ளையனின் அடிமைகளாக இருந்த போது கூட நம்மிடம் தன்மானமும், சுய புத்தியும் மிச்சம் இருந்தது, காங்கிரஸ் என்னும் துப்பு கெட்டவர்களின் அடிமையாக வாழும் நமக்கு இழப்பதற்கு என்ன இருக்கிறது? எத்தனை ஊழல்கள் செய்தாலும், எத்தனை முறை கேடுகள் நடந்தாலும், அரசியல் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து தங்களை பரிசுத்ததன்மை மிக்கவர்களாகவும், தூய்மையின் மொத்த குத்தகைகாரர்களாகவும் காட்டி கொள்வதில் காங்கிரஸ் தலைவர்களை மிஞ்ச இதுவரை, இல்லை, இல்லை; இனிமேலும் யாரும் பிறக்க முடியாது! அப்படியே இதை எல்லாம் மீறி ஒரு பிரச்சனை வந்தால், காந்தியின் பின்னாலோ, அல்லது இன்றைய காங்கிரஸ் தலைவர்களின் முயற்சியில் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது போன்ற ஒரு மாயையை உருவாக்கியோ, தப்பித்து கொள்ளும் ஆண் மகன்களின் கூட்டமைப்பு தான் இந்த காங்கிரஸ் கட்சி. நீங்கள் ஒரு தனி மனிதனாகவோ, சமூக எழுச்சி அமைப்பாகவோ இருந்து காங்கிரஸின் எதாவது ஒரு தவறை சுட்டிகாட்டுங்கள் பார்க்கலாம், நீங்கள் விடுதலை புலியாகவோ, மதவாத அமைப்பாகவோ, நக்சலாகவோ, அந்நிய சக்தியாகவோ சித்தரிக்கபடுவது நிச்சயம், ஒரு வேளை காங்கிரசுக்கு எதிரான உங்கள் குற்றச்சாட்டு கடுமையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் வேற்று கிரக சதிகாரகளாக கூட சித்தரிக்க படலாம்! வாழ்க ஜனநாயகம்


-வி. எஸ். வினோத் குமார்

No comments:

Post a Comment