அந்நிய நாட்டு எதிரிகளிடம் இருந்து நம்மை காப்பாற்ற லட்சம் கோடிகளை செலவழிக்கும் அரசு, சில ஆயிரம் கோடிகளுக்காகவும் அந்நிய முதலாளிகளின் நலனுக்காகவும், சொந்த நாட்டு மக்களை கொன்று குவிக்க தயாராவது கேலி கூத்து! எளிய மக்களின் நலுனுக்காக எதிராக நடைபெறும் எந்த முயற்சியும் ஒரு பெரும் அழிவின் தொடக்க புள்ளியே.
அறிவுரை கூற நான் ஞானியோ, அனுபவசாலியோ அல்ல, மனசாட்சியும், ஆன்மாவும் உடைய சராசரி மனிதனாக எனது ஆழ் மன உணர்வுகளை பதிவிடுகிறேன்!
Wednesday, April 11, 2012
நிலநடுக்கம், சுனாமியில் இருந்து பாதுகாப்பு : வாயால் வடை சுடும் சங்கம்!
செய்தி: தமிழகம், ஆந்திர மாநிலங்களில் எச்சரிக்கை!
பேசாம ஊருக்கு ஒரு அணு உலை வச்சிட்டா, என்ன பூகம்பம்னாலும், சுனாமினாலும் மக்கள் எல்லாரும் உள்ள போய் பாதுகாப்பா இருக்கலாமே! மத்திய, மாநில அரசுகள் சட்டு புட்டுனு பேசி ஒரு முடிவுக்கு வாங்க. என்ன APJ சார், நாராயணசாமி சார் கொஞ்சம் பாத்து செய்யுங்க. உலக நாடுகளும் நம்மூரில் உள்ளது போல 200 சதவிகிதம் பாதுகாப்பான அணு உலைகள கட்டி தங்கள் மக்களை பாதுகாத்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்ளபடுகிறது! மேலும் விவரங்களுக்கு வாயால் வடை சுடும் சங்க தலைவர் APJ மற்றும் துணை தலைவர் நாராயணசாமியை www.vaayalvadaisuduvom.com இல் அணுகவும்.
பீதியிலே, பேதி!
செய்தி: தமிழகம், ஆந்திர மாநிலங்களில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை!
ஒரு சின்ன ஆட்டத்துக்கே, பீதியிலே பேதியாகி கொண்டிருக்கும் அணு உலை ஆதரவாளர்களே! அதிகார பூர்வ அறிவுப்பு வரதுக்கு முன்னாடியே, எதுக்கு 200 சதவிகிதம் பாதுகாப்பான அணு உலையே விட்டுட்டு , பாதுகாப்பே இல்லாத வேற எங்கயோ தலை தெறிக்க நம்ம அறிவு களஞ்சியங்கள் ஓடினாங்கனு கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்! அப்படியே அந்த மங்கோஸ் மண்டயனையும், ஸ்னேக்கு பாபுவையும் பார்த்தா இந்த பக்கம் கொஞ்சம் வந்துட்டு போக சொல்லுங்க!
Subscribe to:
Posts (Atom)