Wednesday, August 15, 2012

முடிந்தால் சிந்தியுங்கள் - 3!

நாடு வேறு, நாட்டை ஆள்பவர்கள் வேறு. நாட்டை ஆள்பவர்கள் புனிதர்களாக இல்லாமல் சராசரி மனிதர்களாக இருந்து விட்ட காரணத்தின் விளைவே இன்றைய அனைத்து அவலங்களும். இந்த நிலையில் இல்லாமல் இருந்தால், அல்லது வேறு நிலையில் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்பது வாதத்திற்கு மிக சிறந்த காரணி, மனித இயல்பு, அனால் உண்மை? 100 % வாழ்வதற்கு சிறந்த இடம், சிறந்த வழி, சிறந்த கலாச்சாரம் என்று எதையாவது குறிப்பிட முடியுமா? இயற்கை விதிகளினால் இம்மண்ணின் மைந்தர்கள் படைக்கப்பட்டவர்கள் நாம், இந்த நாட்டில் உள்ள குறைகளை களைவது, நம் உடம்பில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோயை அணுகும் நேர்த்தியோடு இருக்க வேண்டுமே தவிர, அதை விட்டு சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவிப்பது பல லட்சம் பேரின் தியாகத்தை கொச்சை படுத்தும் செயலாகும். நிகழ் கால சமுக போராளிகள், கடந்த கால போராளிகளின் தியாகத்தை இப்படி அணுகுவது ஆரோக்யமானதல்ல! நோக்கங்கள் நல்லதற்காக இருந்தாலும் அதை செயல்படுத்தும் வழிமுறை தவறாகும் போது சராசரி மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போவோம். 

முடிந்தால் சிந்தியுங்கள்!

சுதந்திர தின வாழ்த்துக்கள்!


அன்புடன்,
V . S . வினோத் குமார் 

No comments:

Post a Comment