பிராமணன் என்று கூறி கொண்டு கழிசடையாக நடப்பவர்கள் அதிகம் பேர், அதை காரணம் காட்டி தலித் என்று கூறி கொண்டு கழிசடை தனம் செய்பவர்கள் நியாயவாதிகள் ஆகி விட மாட்டார்கள். இரண்டு பேருமே கழிசடைகள தான்! பிராமணம் என்று கூறி கொண்டு தீட்டு பார்பவனும், தலித் என்று சொல்லி கொண்டு அனைத்து பிராமணனையும் தீட்டாக பார்பவனும் எந்த விதத்தில் வேறுபட்டவன்? பிரச்சனை தெரிந்தோ, தெரியாமலோ ஒட்டி கொண்டு இருக்கும் ஜாதியில் இல்லை; பிற அடையாளங்களோடு உள்ளவனிடம் ஒட்டாமல் இருக்கும் மனங்களில் தான் உள்ளது. ஒரு ஜாதி, மத, இன அடையாளத்தோடு உள்ள பெரும்பாலானவர்களின் மன நிலை, அனைவரின் மன நிலை ஆகாது, தனி நபர் குற்றங்களுக்கு ஜாதி, மத சாயம் பூசி பிரிவினை ஏற்படுத்துவதை தவிர்ப்போம், ஒன்றிணைந்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சிக்காக பாடுபடுவோம், சமத்துவத்தை சமாதியில் இருந்து உயிர்பிப்போம், மனிதத்தை வளர்ப்போம்.
முடிந்தால் சிந்தியுங்கள்!
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்
பின் குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்த அல்ல, நம் மனங்களை பண்படுத்த!
No comments:
Post a Comment