விலைவாசிகளை அதிகரிப்பதிலும்;
பொருளாதார இடைவெளியை விரிவுப்படுத்துவதிலும்;
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிகளை உருவாக்குவதிலும்;
மக்களை பொருள் நெருக்கடியில் சிக்க வைத்து அவர்களை இயங்க விடாமல் செய்வதிலும்;
வளர்ச்சி என்ற மாயையை கொண்டு மனிதத்தை சிதைப்பதிலும்;
சுற்றுச்சுழலை பாழ்படுத்துவதிலும்;
அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் ஊழல்வாதிகளாக மாற்றுவதிலும்;
நேர்மையாக இயங்க விரும்பும் வெகு சிலரையும் இல்லாமல் செய்வதிலும்;
தங்கள் விருப்பு, வெறுப்பு, லாப நஷ்டத்திற்காக சட்டங்களை வலைப்பதிலும்;
அநியாயமான நியாயங்களை வகுப்பதிலும்;
நீதி கேட்டு நடக்க கூடிய போராட்டங்களை சிதைப்பதிலும்;
அந்நிய சக்திகளுக்காக இந்தியாவை தாரை வார்த்து கொடுப்பதிலும்;
இந்த பெரு முதலாளிகளின் கை ஓங்கி கொண்டே இருக்கிறது.
அதிக அளவிலான குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர்களை உருவாக்குவதன் மூலம் பெருமளவு மக்களை பொருளாதார அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு விட முடியும், அதே நேரத்தில் கட்டுக்கடங்கா சக்திகளையும், அதிகாரங்களையும் குவித்து வைத்திருக்க கூடிய இந்த பெரு முதலாளிகளை அடித்து விரட்டி விட முடியும்.
பல ஆயிரம் வருடங்களாக நம் மரபணுவில் பதிந்து விட்ட அடிமை செல்களை உடைத்தெறிந்து இதை நம்மால் சாத்தியப்படுத்தி விட முடியுமா?
முடிந்தால் சிந்தியுங்கள்!
No comments:
Post a Comment