Thursday, September 29, 2011

இவன் சரிப்பட்டு வரமாட்டான்!




மழைக்கால தொடர்: ராகுல் பார்லிக்கு வந்தது 6 நாள் தான்!
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி துவக்கி, செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம், 25 நாட்கள் பார்லிமென்டின் அவைகள் இயங்கின. இந்த கூட்டத்தொடரில் நடந்த மிக முக்கிய விவாதங்களில், மிகவும் குறிப்பிடத்தக்கவை என்று எடுத்தால், இலங்கை தமிழர் விவகாரம், தெலுங்கானா பிரச்னை, விலைவாசி உயர்வு விவகாரம், கிட்டங்கிகளில் உணவுப்பொருட்கள் வீணாவது ஆகியவைதான். இந்த விவாதங்கள் நடைபெற்ற தெல்லாம் அவையில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். ஆனால், இந்த விவாதங்கள் எதிலும் காங்கிரஸ் எம்.பி.,யும், அந்த கட்சியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் கருதப்படும் ராகுல் பங்கேற்கவில்லை. மழைக்கால கூட்டத்தொடரின் போது ஒரே ஒருமுறை மட்டும் ராகுல் பேசினார். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதை தாக்கி அவையில் அவர் பேசினார். உண்ணாவிரதம் இருப்பதன் வாயிலாக அவர் பார்லிமென்ட் மீது அதிகாரம் செலுத்துவதாகவும், அது முடியாது என்று ஹசாரேவை எச்சரித்தும் லோக்சபாவில் பேசினார். அன்றைய தினம் ராகுல் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பொதுவாக, ஜீரோ நேரத்தில் இதுபோல யாருக்கும் திடீர் அனுமதியை சபாநாயகர் வழங்குவது இல்லை என்றும், ராகுலுக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிக்கப்படுவதாகவும், இது பார்லிமென்ட் நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தின.
நன்றி - தினமலர்
ராகுல் உச்சா போனா கூட பக்கம் பக்கமா எழுதுற ஆங்கில பத்திரிகைகளும், ஆங்கில செய்தி சேனல்களும் அவர் பாராளுமன்றம் பக்கமே போகாம இருந்ததை மட்டும் எப்படி எழுதாம விட்டாங்க.
இவன் சரிப்பட்டு வரமாட்டான், அந்த விழயத்துக்கு இவன் கண்டிப்பா சரி பட்டு வரவே மாட்டான். சொன்னா கேளுங்க!



அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்

பெண்ணிய அமைப்புகளின் கவனத்திற்கு!



உங்கள் பாதுகாப்புக்காக, நாகரீகமாக உடை அணிய யாராவாது சொன்னால், உங்கள் உரிமைகளை நிலை நாட்டுகிறோம் என்று கூறி உலகம் முழுவதும் போராடுகிறீர்கள், எல்லா சேனல்களும், 5 நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களை வாசனை திரவியதுக்கும், பல் பசைக்கும், ஆண்கள் அணியும் உள்ளாடைகளுக்கும், அவர்கள் வைத்திருக்கும் காருக்கும், செல் போனுக்கும் அலையும் அற்ப பிறவிகளாக சித்தரித்து கொண்டிருப்பதை எதிர்த்து எந்த அமைப்பும் போராடுவதாக தெரியவில்லையே! உங்கள் நோக்கம் தான் என்ன !? கடவுளுக்கு அடுத்த நிலையில் பெண்களை வைத்து வணங்கும் நாட்டில் பிறந்து விட்டு அல்பமாக நடந்து கொள்வதை இனி மேலாவது குறைத்து கொள்ளுங்கள். நீங்கள் தான் இந்த நாட்டின் வளர்சிக்கான குறியீடாக இருக்க வேண்டும், நீங்கள் தான் இந்த சமூகத்தின் வழிகாட்டிகளாக திகழ வேண்டும், நீங்கள் தான் உங்கள் குடும்பத்தின் ஆணி வேராக இறுக்க வேண்டும், உங்களால் தான் குற்றங்களற்ற ஒரு தலைமுறையை உருவாக்க முடியும். உங்கள் சிறப்பை உணருங்கள், உங்களை கீழ் தரமாக சித்தரிக்க யாரையும் அனுமதிக்காதிர்கள் , உங்கள் சக்தியை குடும்பத்தின் வளர்சிக்கும், சமூகத்தின் நன்மைக்கும், நாட்டின் எழுச்சிக்கும் பயன்படுத்துங்கள்.


அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்


Wednesday, September 21, 2011

இப்படியும் சொல்வார்கள் - எலி மருந்து பாதுகாப்பானது!



பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு இலக்கை துள்ளியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை தயாரிக்கும் இஸ்ரோ சொல்கிறது, "கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று" ! ஒரு வேளை உலகத்திலயே இந்தியாவிடம் மட்டும் தான் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் உள்ளதோ?? 13000 கோடி வீணாகிறதே என்று கவலைபடுபவர்கள் கவனத்திற்கு, பல லட்சம் கோடிகள் வரி எய்பால் வீணாகிறது, முதலில் அதற்கு குரல் கொடுங்கள் பின்பு அணு உலையால் வீணாகும் 13000 கோடி ஒரு பெரிய இழப்பாக தெரியாது, இருமல் மருந்து என்று நினைத்து எலி மருந்தை வாங்கி விட்டால் பணம் வீணாகிறது என்று குடிக்கவா முடியும்??  i

Thursday, September 15, 2011

WORRIED ABOUT HIKE IN PETROL PRICE??


-Try using public transport as much as possible
-Avoid using Cars/Autos when travelling alone
-Minimize use of bikes for shorter distances. Try walking or cycling
-Declare House Rent Allowance correctly and pay your taxes properly
-Avoid purchasing anything from the black market
-Get proper receipts for any thing you purchase
-Declare the correct value of a property when registring it
-Try helping atleast 10 bpl individuals in your neighbourhood to come up financially 
-Minimize the habit of unncessary shopping and use of credit cards
-Try saving at least 20% of your income as savings
and then start commenting and condemning government else PLEASE KEEP QUIET.

Thursday, September 1, 2011

தேர்தலை சந்திக்காதவர் தன்னை மக்களின் குரல் என்பதா? ஹசாரே மீது சசிதரூர் தாக்கு!

தேர்தலை சந்திக்காதவர் தன்னை மக்களின் குரல் என்பதா? ஹசாரே மீது சசிதரூர் தாக்கு

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் ஆணையம் நடத்துகின்ற ஓட்டு எடுப்பின் மூலம் தான் தலைவர்கள் உருவாக முடியும் என்று நினைகின்ற போக்கே ஜனநாயகத்திற்கு எதிரானது! கட்டாயமாக குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை நடத்தபடுகிற ஓட்டு எடுப்பின் மூலம் உருவாக்க படுகிற தலைவர்களை விட, காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து மக்கள் சக்தி மூலம் உருவாகின்ற தலைவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் என்பது கூட புரியாத இந்த அறிவு ஜீவிக்கிளை எல்லாம்!!