உங்கள் பாதுகாப்புக்காக, நாகரீகமாக உடை அணிய யாராவாது சொன்னால், உங்கள் உரிமைகளை நிலை நாட்டுகிறோம் என்று கூறி உலகம் முழுவதும் போராடுகிறீர்கள், எல்லா சேனல்களும், 5 நிமிடங்களுக்கு ஒரு முறை உங்களை வாசனை திரவியதுக்கும், பல் பசைக்கும், ஆண்கள் அணியும் உள்ளாடைகளுக்கும், அவர்கள் வைத்திருக்கும் காருக்கும், செல் போனுக்கும் அலையும் அற்ப பிறவிகளாக சித்தரித்து கொண்டிருப்பதை எதிர்த்து எந்த அமைப்பும் போராடுவதாக தெரியவில்லையே! உங்கள் நோக்கம் தான் என்ன !? கடவுளுக்கு அடுத்த நிலையில் பெண்களை வைத்து வணங்கும் நாட்டில் பிறந்து விட்டு அல்பமாக நடந்து கொள்வதை இனி மேலாவது குறைத்து கொள்ளுங்கள். நீங்கள் தான் இந்த நாட்டின் வளர்சிக்கான குறியீடாக இருக்க வேண்டும், நீங்கள் தான் இந்த சமூகத்தின் வழிகாட்டிகளாக திகழ வேண்டும், நீங்கள் தான் உங்கள் குடும்பத்தின் ஆணி வேராக இறுக்க வேண்டும், உங்களால் தான் குற்றங்களற்ற ஒரு தலைமுறையை உருவாக்க முடியும். உங்கள் சிறப்பை உணருங்கள், உங்களை கீழ் தரமாக சித்தரிக்க யாரையும் அனுமதிக்காதிர்கள் , உங்கள் சக்தியை குடும்பத்தின் வளர்சிக்கும், சமூகத்தின் நன்மைக்கும், நாட்டின் எழுச்சிக்கும் பயன்படுத்துங்கள்.
அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்
No comments:
Post a Comment