பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி துவக்கி, செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம், 25 நாட்கள் பார்லிமென்டின் அவைகள் இயங்கின. இந்த கூட்டத்தொடரில் நடந்த மிக முக்கிய விவாதங்களில், மிகவும் குறிப்பிடத்தக்கவை என்று எடுத்தால், இலங்கை தமிழர் விவகாரம், தெலுங்கானா பிரச்னை, விலைவாசி உயர்வு விவகாரம், கிட்டங்கிகளில் உணவுப்பொருட்கள் வீணாவது ஆகியவைதான். இந்த விவாதங்கள் நடைபெற்ற தெல்லாம் அவையில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். ஆனால், இந்த விவாதங்கள் எதிலும் காங்கிரஸ் எம்.பி.,யும், அந்த கட்சியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகவும் கருதப்படும் ராகுல் பங்கேற்கவில்லை. மழைக்கால கூட்டத்தொடரின் போது ஒரே ஒருமுறை மட்டும் ராகுல் பேசினார். அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பதை தாக்கி அவையில் அவர் பேசினார். உண்ணாவிரதம் இருப்பதன் வாயிலாக அவர் பார்லிமென்ட் மீது அதிகாரம் செலுத்துவதாகவும், அது முடியாது என்று ஹசாரேவை எச்சரித்தும் லோக்சபாவில் பேசினார். அன்றைய தினம் ராகுல் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பொதுவாக, ஜீரோ நேரத்தில் இதுபோல யாருக்கும் திடீர் அனுமதியை சபாநாயகர் வழங்குவது இல்லை என்றும், ராகுலுக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிக்கப்படுவதாகவும், இது பார்லிமென்ட் நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தின.
நன்றி - தினமலர்
ராகுல் உச்சா போனா கூட பக்கம் பக்கமா எழுதுற ஆங்கில பத்திரிகைகளும், ஆங்கில செய்தி சேனல்களும் அவர் பாராளுமன்றம் பக்கமே போகாம இருந்ததை மட்டும் எப்படி எழுதாம விட்டாங்க.
இவன் சரிப்பட்டு வரமாட்டான், அந்த விழயத்துக்கு இவன் கண்டிப்பா சரி பட்டு வரவே மாட்டான். சொன்னா கேளுங்க!
இவன் சரிப்பட்டு வரமாட்டான், அந்த விழயத்துக்கு இவன் கண்டிப்பா சரி பட்டு வரவே மாட்டான். சொன்னா கேளுங்க!
அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்
இவன் அந்த விசயத்துக்கு சரி பட்டு வர மாட்டான்
ReplyDelete