Saturday, October 15, 2011

அரசாங்கத்தின் பூச்சாண்டி!

 
 
நிலக்கரி பற்றாகுறை, காற்றலை உற்பத்தி குறைவு என மின் பற்றாகுறை பிரச்சனையை மிகைபடுத்தி, அணு மின் நிலைய பிரச்சனையை திசை திருப்ப முயலும் மத்திய அரசு, நாளை உணவு பற்றாகுறை என்று மனிதர்களை மனிதர்களே கொன்று திண்ண கூட சட்டம் இயற்றினாலும் அச்சிரியபடுவதர்கில்லை! நம் இந்தியாவின் மக்கள் சக்தியை பயன்படுத்தி பல ஆயிரம் கோடிகளை லாபமாக தங்கள் நாட்டுக்கு எடுத்து செல்லும் கார்பரேட் நிறுவனங்கள், தங்கள் மின் தேவையை அரசாங்கத்தை நம்பியில்லாமல் சுயமாக பூர்த்தி செய்ய தீர்மானம் இயற்றபட வேண்டும், இது தற்போது எழுந்துள்ள அணுமின் பிரச்சனைக்கு தீர்வாக மட்டும் இல்லாமல், நட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஒரு ஊக்கமாகவும், புதிதாக பல தொழிலதிபர்கள் மின் உற்பத்தியில் கால் பதிக்க ஒரு உந்துதலாகவும், உலக அளவில் மின் உற்பத்தியில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரிக்க ஒரு வாய்பாகவும் இருக்கும். பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வை யோசிக்காமல், குறுக்கு வழியில் காரியத்தை சாதிக்க நினைக்கும் அரசின் இந்த மெத்தன போக்கு என்று தான் மாறுமோ! 
அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்

No comments:

Post a Comment