ப்ரீதிக்கு
நான் காரண்டீ என்பது போல மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர
முயற்சிக்கிறார் நம் பிரதமர்! அலையாத்தி காடுகளை வளர்ப்பதன் மூலம்
சுனாமியின் பாதிப்பை குறைக்க முடியும் என்று அறிவியல் மேதைகள் படித்து
படித்து சொல்லியும், இன்று வரை எந்த இந்திய கடற்கரையிலும் அலையாத்தி
காடுகளை வளர்க்க தீவிர முயற்சி எடுத்ததாக தெரியவில்லை, இவர் நம்
பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தர முயற்சிப்பது பூனையின் கண்ணை மூடி விட்டு
உலகமே இருண்டு விட்டதாக அதை நம்ப வைக்கும் முயற்சி தவிர வேறு இல்லை.
பதிமூன்றாயிரம் கோடிக்காக ஆறு கோடி மக்களின் உயிரோடு விளையாடுவது
இரண்டாயிரம் ரூபாய் இழப்புக்காக ஒருவனின் உயிரை பறிக்க முயற்சிபதற்கு சமம்.
பொது மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து, கார்பரேட் நிறுவனங்களின்
லாபத்திற்காக தமிழகத்தை இன்னொரு போபாலாக்க முயற்சிப்பதை வன்மையாக
எதிர்க்கிறோம்.
அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்
No comments:
Post a Comment