Wednesday, November 9, 2011

முடிந்தால் சிந்தியுங்கள் - 2

உறவுகளை துச்சமாக மதித்து, அந்நிய நாட்டில் கிடைக்கும் பணத்திற்காகவும், அதன் மூலம் கிடைக்கும் வசதிகளுக்காகவும், கட்டவிழ்த்த சுதந்திரத்துக்காகவும், ராஜ அடிமைகளாக உங்கள் வாழ்கையை தொலைத்து கொண்டிருக்கும் இந்தியர்களே! உங்கள் செயலை நியாயபடுத்த, இந்திய நாட்டில் அது நொட்டை, இது நொல்லை என்று சொல்வதை தயவு செய்து இன்றோடு நிறுத்தி விடுங்கள். உங்கள் தாயார் அசிங்கமாக இருந்தால், அழகாக இருக்கும் த்ரிஷாவையும், நயந்தாராவையும் அம்மா என்று எப்படி கூப்பிட முடியாதோ, அதே போல் எங்கள் தாய் நாட்டில் எவ்வளவு நொட்டைகள் இருந்தாலும், எவ்வளவு நொல்லைகள் இருந்தாலும் எங்களால் அவளை விட்டு கொடுக்க முடியாது! உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்தியாவில் இருங்கள், இல்லை உங்கள் விருப்பம் போல் உலகத்தின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் சென்று வாழ்கையை தொடங்குங்கள், நாங்கள் தடுக்கவில்லை, அதை விட்டு இந்தியாவை குறை சொல்லி உங்களையும் ஏமாற்றி கொண்டு, வருங்கால இந்தியாவையும் எமாற்றதிர்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை பற்றியும், உங்கள் செல்வம் கொழிக்கும் சமூகத்தில் இருக்கும் இருண்ட பகுதியை பற்றியும் எங்களுக்கு நன்றாகவே தெரியும். முதலில், செல்வம் என்ற வார்த்தைக்காக நீங்கள் இழந்ததையும், இழந்து கொண்டிருப்பதையும், இழக்க போவதையும் பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் நீங்கள் இன்னும் வாழ தொடங்கவே இல்லை என்பது புரியும்!

முடிந்தால் சிந்தியுங்கள்!

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

ஏழாம் அறிவு!

சூர்யா : ஆண் பிள்ளை இறந்தால் கூட நெஞ்சில் கத்தியை வைத்து கிழித்து விட்டு பின்னர் புதைப்பர்கள், ஆனால் இன்னைக்கு நாம் புறமுதுகிட்டு ஓடிகிட்டு இருக்கோம், காரணம் நாம் நாமா இல்லாததுனால.. இனிமேல் தமிழன் திருப்பி அடிப்பான் 

ஸ்ருதி ஹாசன் : கொஞ்ச நாளைக்கு முன்னாடி தமிழர்களை எப்படி கொன்னங்கன்னு பாத்தீங்களா... இப்ப இருக்குற உலகத்துல வீரம்னு பேசுனா அது முட்டாள்த்தனம்

சூர்யா: வீரத்துக்கும், எதிரிகள் செய்த துரோகத்துக்கும் வித்தியாசம் இருக்கு. துரோகம் பண்றவன் தமிழன் இல்ல.. 7 ஆதிக்க நாடுகள் வந்து போர் புரிஞ்சாலும் கடைசி வரைக்கும் களத்துல நின்னவன் தமிழன், அவன் வீரன்//

கேட்பதற்கு பெருமையாக இருந்தாலும் பெருமைப்பட முடியவில்லை! இன்னும் புதினம், தமிழ்நெட் போன்ற வலைதளங்களில், ஒவ்வொரு நாளும் நான் கண்ட லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களின் சிதைந்த உடல்கள் கண்முன்னேயே இருக்கிறது, பெண்கள், குழந்தைகள், முதியோர் என யாரையும் விட்டு வைக்கவில்லையே, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளும், கொத்து குண்டுகளும் நம்மை போன்ற உயிருள்ள மனிதர்களை சில்லு சில்லாக சிதைத்து கொண்டிருந்தனவே, ஐ. நா வழங்கிய உணவு பொருட்களையும், மருத்துவ உதவியையும் கூட தடை செய்து பசியாலும், மருத்துவ உதவி இன்றியும் எவ்வளவு பேரை கொன்றார்கள்! அப்பொழுது பேசி இருக்கலாமே இந்த வசனத்தை!! இறையாண்மை என்ற ஒரு வார்த்தையை வைத்து கொண்டு இந்த பரந்த உலகத்தையே ஆண்மை அற்றதாக ஆக்கி விட்டனரே! திவீரவாததிற்கு எதிரான போர், இந்த கொலைகார வாக்கியம் குடித்த உயிர்களின் எண்ணிக்கை எத்தனை லட்சம்? உலகத்தின் எல்லா மூலைகளிலும் தீவிரவாதத்திற்கு எதிரான போர் நடந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால், இத்தனை லட்சம் அப்பாவி உயிர்களை எந்த போரும் எடுக்கவில்லையே, போர் முடிந்த பின்னரும் லட்சகணக்கான மக்களை இப்படி கூண்டில் அடைத்து சித்தரவதை செய்யவில்லையே? நாதியற்ற இனம் தானே நம் தமிழ் இனம், இதில் நமக்கு எதற்கு பெருமை! இந்த வீர வசனங்களை 2 வருடங்களுக்கு முன் பேசி இருந்தால் கூட இன்னும் சில நூறு சூர்யா ரசிகர்கள் வீதியில் இறங்கி போராடி இருப்பார்கள்

மாற்றம்!

பகுத்தறிவு என்பதை எல்லாரும் பெரியாரின் சொத்தாக மட்டும் பார்க்கும் வரை மாற்றம், ஏமாற்றமாக தான் இருக்கும்! சிந்தனை என்பது அறிவியலுக்கும், பணத்திற்கும் மட்டும் சொந்தமாக ஆன பின்னே மாற்றம் தடுமாறி கொண்டு தான் இருக்கும்!

கடவுளால் கூட காப்பாற்ற முடியாது!

மக்களின் நியாமான கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு தெரியபடுத்துவதும், அரசாங்கத்தின் தவறான முடிவுகளை மக்களுக்கு அம்பலபடுதுவதும் தான் ஒரு பத்திரிகையின் முதற்கடமையாக இருக்க முடியும். கூடங்குளம் விவகாரத்தில் அரசாங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர்கள் போல செயல்படும் சில பத்திரிகைகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் மக்களின் நியாமான கோரிக்கைகளை பொய் பிரச்சாரங்கள் மூலம் இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பது வேசித்தனமான செயல். 
மக்களின் மனசாட்சியாக செயல் பட வேண்டிய பத்திரிகைகள், அதிகாரவர்கத்தின் பல சாட்சியாகவும், பணம் படைத்தவர்களின் பண சாட்சியாகவும் மாற ஆரம்பித்து விட்டால், இந்த நாட்டு மக்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது.

அக்னி சிறகுகளும், நூறு ரூபாயாயும்!

'அணுமின் நிலையம் ஒரு வரப்பிரசாதம்'- கலாம் 
சாருக்கு ரெண்டு பொட்டலம் பிரசாதம் பார்சல். 
கலாம் இப்படி ஒரு காமெடி பீசா இருப்பாருன்னு மொதலயே தெரிஞ்சிருந்தா அக்னி சிறகுகள் புக்குக்கு நூறு ரூபாயா வேஸ்ட் பண்ணி இருக்க மாட்டேன்.


மிக பெரிய அறிவாளி, மிக பெரிய தலைவர், மிக பெரிய வழிகாட்டி, பல இளைஞ்சர்களோட ரோல் மாடல் இப்படி கேவலமா ஒரு கருத்த சொல்லுவாரு அத எல்லாரும் வாய மூடிட்டு கேக்கணும், அப்படி தானே?

கடைசி துளி மரியாதை!

கூடங்குளம்: ரூ. 200 கோடியில் கலாமின் 10 அம்ச திட்டம்!

டேய் வெட்கமே இல்லையடா உங்களுக்கு எல்லாம்?
இன்னும் எத்தனை நாளுக்கு தான் உங்களோட தப்பான திட்டங்களை நடைமுறைபடுத்தவும், உங்களோட தவறுகளை மறைக்கவும், இந்த மாதிரி வருமையில கஷ்டபடுபவர்களை விலை குடுத்து வாங்கி அவங்களை அடிமையாவே வச்சி இருப்பீங்க? குவாட்டர்ல ஆரம்பிச்சு, வேலை வாய்ப்பு வரைக்கும் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தே காரியத்த சாதிக்க நினைகிறீங்க, என்னைக்காவது நமக்கு ஒரு விடுவு காலம் பொறக்காதனு ஏங்கிட்டு இருக்குற மக்களோட பலஹீனத்த உங்களுக்கு சாதகமா பயன்படுத்துகுரிங்களே, உங்கள எல்லாம் நூறு தடவை தூக்குல போட்டாலும் கூட பத்தாது டா. மத கொள்கைகள சொல்லி மனித வெடிகுண்டுகள உருவாக்குற தீவீரவாதிகும், நல திட்டங்கள காமிச்சி மக்களை பலி கடா ஆக நினைக்கிற உங்கள மாதிரி கீழ் தரமான ஆட்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. முடிஞ்சா என்ன பிரச்சனையோ அதுக்கு பேசி தீர்வு காணுங்க, மக்களோட நியாமான கேள்விகளுக்கு விடை கொடுங்க, மக்களோட நியாமான பயத்த போக்குங்க, எந்த ஒரு பெரிய அறிவியல் வல்லுநரா இருந்தாலும் ஒரு பேரழிவு ஏற்படும் போது நீங்க சொல்ற மாதிரி radiation levels ஆ பார்த்துட்டு மக்களுக்கு சொல்லனும்னு உட்காந்து இருக்க மாட்டான், அவனையும் அவன் குடும்பத்தையும் காப்பாதிக்க துண்ட காணோம் துணிய காணோம்னு தான் ஓடுவான், இத எங்க வேணும்னாலும் வந்து நிருபிக்க என்ன மாதிரி ஒரு சாதாரன ஆளாலயே முடியும், எதுல நீங்க சொல்ற பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை மையம் எல்லாம் வேலை செய்யாது.

கலாம் சார் உங்க மேல இருந்த கடைசி துளி மரியாதையும் இந்த செய்தியை படித்தவுடன் செத்து விட்டது. முடிந்தால் உங்கள் செய்கையை திருத்தி கொள்ளுங்கள் இல்லையேல் உங்களை தலை மேல தூக்கி வைத்து கொண்டாடிய இந்த தமிழ் நாடு உங்கள் முகத்தில் காரி உமிழ ஆரம்பித்து விடும்.

என்ன பண்ணுவீங்க?

நூறு பேரை எவக்யுவேட் பண்றதுகுள்ளயே நம்ம தீயணைப்பு துறைக்கும், போலீசுக்கும் டப்பா டான்ஸ் ஆடிடும், அணு உலையில கதிரியிக்க கசிவு ஏற்பட்டா பத்து லட்சம் பேரை எவக்யுவேட் பண்ணுனுமே என்ன பண்ணுவீங்க?

வரலாற்று பிழைகள்!

 மனிதத்தை ஆட்கொள்ள கூடிய எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் வளர்ச்சி அல்ல வரலாற்று பிழைகள்.

கொள்கை பரப்பு ஜால்ராக்கள்!

கலாம் சார் தப்பா நெனைச்சுகாதீங்க, தப்பு தான், ஆனா கேக்க வச்சிடீங்களே, என்ன பண்றது! எங்க பார்த்தாலும் கலாமே சொல்லிடாரு, கலாமே சொல்லிடாருனு ஒரு இளைஞர் கூட்டம் அலையுது, டேய் நீங்க என்னடானு நெனைகிரீங்கனு கேட்டாலும், நமக்கு என்னடா தெரியும், அதான் கலாமே சொல்லிடாரேனு சொல்றாங்க, நாளைக்கு கல்யாணம் பண்ண அவங்க வீட்டுல கேக்கும் போதும், கலாமே கல்யாணம் பண்ணல அப்படின்னு இவங்க எல்லாரும் கல்யாணம் பண்ணாம இருப்பாங்களோ! பாத்து சார் நாட்டோட வளர்ச்சி உங்களால கெட்டுட போகுது, அப்பறம் எப்படி வல்லரசு ஆகறது, வளர்ந்த நாடு ஆகறது! உங்க கணவை உங்க கொள்கை பரப்பு செயலாளர்களே கேடுதுடுவானுங்க போல இருக்கே!

கூடங்குளம் அணுமின் நிலையதிற்கு எதிராக பேசுபவர்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள்!

கூடங்குளம் அணுமின் நிலையதிற்கு எதிராக பேசுபவர்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பவர்கள். அவர்கள்மீது மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்- அப்துல் கலாம்
யப்பா இப்பவே கண்ண கட்டுதே! இவரு தெரிஞ்சு பேசுறாரா, இல்ல சும்மா டைம் பாஸ் பண்றரா! ஜனநாயகத்தை அழிச்சிட்டு இவரு என்ன மயித்த புடுங்க போறாரு! காந்தி பிறந்த நாட்டில், அணு ஆயுதங்களை வளர்த்து விட்ட இந்த மாதிரி மகான்களுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுத்தால் இது தான் கதி!

Monday, November 7, 2011

நயன்தாராவுடன் அணு உலை திறப்பு விழா!

அமெரிக்கா கம்பனி தயாரிச்ச ஜட்டி பனியன் அளவை சரி பார்க்குற சாப்ட்வேர்கே, ஸ்மோக் டெஸ்ட், அசிட் டெஸ்ட், கிராஷ் டெஸ்ட், ரிக்ரேச்சன் டெஸ்ட் னு என்ன என்னவோ எடுத்துட்டு தான் குடுக்குறீங்க, இருபது லட்சம் மனிதர்களுக்கு மேல பாதிப்பு ஏற்படுத்த கூடிய ஒரு அணு உலைய, என்ன என்ன டெஸ்ட் எடுத்து பார்த்தீங்க? மக்கள் பயத்த போக்க ஒரே ஒரு டெஸ்ட் எடுத்து காமிங்க சார், நூறு ஏவுகனைகள எடுத்துகோங்க, முப்பதை சீனாவிலும், முப்பதை பாகிஸ்தானிலும், இன்னொரு முப்பதை இலங்கையிலும், இன்னொரு பத்தை காழ்மீர் தீவிரவாதிகள் கிட்டயும் கொடுங்க, அவங்கள அத வெச்சு அணு உலைய தாக்கி காமிக்க சொல்லுங்க, அணு உலைக்கும், மக்களுக்கும் ஒன்னும் அகலைனா நாங்க எல்லாரும் வந்து, மைக் செட் எல்லாம் வச்சி, பிரபுதேவா பர்மிசினோட நயன்தாராவை ஒரு குத்தாட்டம் போட வச்சி திறப்பு விழாவ அமக்களபடுதிடலாம்.


அன்புடன்,
வி எஸ் வினோத் குமார்.

புறக்கணிப்பு!


இந்த உலகமே உன்னை புறக்கணித்தாலும் நீ இழந்து விட போவது ஒன்றும் இல்லை, உன்னை, நீயே புறக்கணிக்க ஆரம்பித்து விட்டால், நீ இழப்பதற்கு உன்னிடம் ஒன்றுமே இல்லை.
அன்புடன்,
வி எஸ் வினோத் குமார்.