Wednesday, November 9, 2011

கடைசி துளி மரியாதை!

கூடங்குளம்: ரூ. 200 கோடியில் கலாமின் 10 அம்ச திட்டம்!

டேய் வெட்கமே இல்லையடா உங்களுக்கு எல்லாம்?
இன்னும் எத்தனை நாளுக்கு தான் உங்களோட தப்பான திட்டங்களை நடைமுறைபடுத்தவும், உங்களோட தவறுகளை மறைக்கவும், இந்த மாதிரி வருமையில கஷ்டபடுபவர்களை விலை குடுத்து வாங்கி அவங்களை அடிமையாவே வச்சி இருப்பீங்க? குவாட்டர்ல ஆரம்பிச்சு, வேலை வாய்ப்பு வரைக்கும் மக்களுக்கு லஞ்சம் கொடுத்தே காரியத்த சாதிக்க நினைகிறீங்க, என்னைக்காவது நமக்கு ஒரு விடுவு காலம் பொறக்காதனு ஏங்கிட்டு இருக்குற மக்களோட பலஹீனத்த உங்களுக்கு சாதகமா பயன்படுத்துகுரிங்களே, உங்கள எல்லாம் நூறு தடவை தூக்குல போட்டாலும் கூட பத்தாது டா. மத கொள்கைகள சொல்லி மனித வெடிகுண்டுகள உருவாக்குற தீவீரவாதிகும், நல திட்டங்கள காமிச்சி மக்களை பலி கடா ஆக நினைக்கிற உங்கள மாதிரி கீழ் தரமான ஆட்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. முடிஞ்சா என்ன பிரச்சனையோ அதுக்கு பேசி தீர்வு காணுங்க, மக்களோட நியாமான கேள்விகளுக்கு விடை கொடுங்க, மக்களோட நியாமான பயத்த போக்குங்க, எந்த ஒரு பெரிய அறிவியல் வல்லுநரா இருந்தாலும் ஒரு பேரழிவு ஏற்படும் போது நீங்க சொல்ற மாதிரி radiation levels ஆ பார்த்துட்டு மக்களுக்கு சொல்லனும்னு உட்காந்து இருக்க மாட்டான், அவனையும் அவன் குடும்பத்தையும் காப்பாதிக்க துண்ட காணோம் துணிய காணோம்னு தான் ஓடுவான், இத எங்க வேணும்னாலும் வந்து நிருபிக்க என்ன மாதிரி ஒரு சாதாரன ஆளாலயே முடியும், எதுல நீங்க சொல்ற பேரிடர் பாதுகாப்பு மேலாண்மை மையம் எல்லாம் வேலை செய்யாது.

கலாம் சார் உங்க மேல இருந்த கடைசி துளி மரியாதையும் இந்த செய்தியை படித்தவுடன் செத்து விட்டது. முடிந்தால் உங்கள் செய்கையை திருத்தி கொள்ளுங்கள் இல்லையேல் உங்களை தலை மேல தூக்கி வைத்து கொண்டாடிய இந்த தமிழ் நாடு உங்கள் முகத்தில் காரி உமிழ ஆரம்பித்து விடும்.

No comments:

Post a Comment