வலிகள் சில நேரங்களில் உந்துதலையும், பல நேரங்களில் வேதனையையும், பின்னடைவையும் ஏற்படுத்துகின்றன. எவன் ஒருவன் வலிகளை தேடி போய் அதனூடே உள்ள உந்துதலை மட்டும் உறிஞ்ச பழகி கொண்டானோ அவனே "வெற்றிக்கான ஒற்றை குறுக்கு வழியை" கண்டு கொண்டவன் ஆகிறான்.
அறிவுரை கூற நான் ஞானியோ, அனுபவசாலியோ அல்ல, மனசாட்சியும், ஆன்மாவும் உடைய சராசரி மனிதனாக எனது ஆழ் மன உணர்வுகளை பதிவிடுகிறேன்!
Friday, November 30, 2012
அனுபவ பாடம் - 2!
இயந்தரமயமாகி விட்ட வாழ்கை பயணத்தில் சிந்தனைக்கான சாத்தியகூறுகள் அழித்து ஒழிக்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், அறிவியல், அரசியல் போன்ற பொருள் சார்ந்த சிந்தனைகள் மனித உணர்வுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று பணத்திற்காகவும், பெட்ரோலுக்காகவும் ஓடும் வாடகை வண்டி போல பொருளாதரத்திற்காகவும், சுயநலத்திற்காகவும் ஓடும் மனித இயந்திரங்களை உருவாக்கி வருகின்றது.
மனிதம் பட்டு போய் விடாமல் தழைக்க பொருள் சார்ந்த சிந்தனைகளுக்கு வேக தடைகள் அவசியமாகின்றன. என் அனுபவத்தில் நீண்ட தனிமை பயணங்கள் ஒரு மிக சிறந்த வேக தடையாக செயல்படுகின்றது, சில மணி நேர பேருந்து, ரயில் பயணங்களில் சிந்தனைகள் சிறிய விதைகளாக விதைக்கப்பட்டு, துளிர் விட்டு விருட்சமாகி விடுகின்றன, அதை போன்று உருவான சிந்தனை விருட்சங்கள் என் வாழ்கை பயணத்தை பலவாறு மாற்றி அமைத்து உள்ளது.
வாழ்கை பயணத்தை செம்மையாகவும், ருசிகரமானதாகவும் அமைத்து கொள்ள பயணங்கள் அவசியமாகின்றன. வேக தடைகள் தானாக உருவாவதற்காக காத்திருக்காமல் வாய்ப்பு கிடைக்கும் போது உருவாக்கி கொள்ளுங்கள், நீண்ட தனிமை பயணங்களாக.
உங்கள் அனுபவம் கூறும் வேக தடைகளையும் தெரியபடுத்துங்கள்.
Wednesday, November 21, 2012
முடிந்தால் சிந்தியுங்கள் - 7
தண்டனை என்பது சட்டபூர்வமாக பழிக்கு பழி வாங்கும் படலம் மட்டுமே என புரிந்து கொள்பவர்களுக்கு கசாப்பின் தூக்கு நியாயமான ஒன்றாய் தான் இருக்க முடியும்! கசாப்பின் தூக்கு நம் பழி வாங்கும் உணர்வுகளுக்கும், அரசியல்வாதிகளின் வாக்கு வங்கிகளுக்கும் வேண்டுமானால் நியாயம் செய்யுமே தவிர தீவிரவதத்தையோ, வன்முறையையோ குறைக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஏமாளியாகவே வைத்திருக்க செய்யப்படும் பூச்சிக்காட்டல் மட்டுமே.
மரண தண்டனைக்கு எதிரான நிலை என்பது மனிதத்திற்கு ஆதரவான நிலை தானே தவிர மரண தண்டனை குற்றவாளிக்கு ஆதரவான நிலை இல்லை. சட்டபடி குற்றமான ஒன்றை சட்டமே செய்யும் போது குற்றமில்லை என்ற அபத்தத்தின் சிறந்த உதாரணம் மரண தண்டனை!
மரண தண்டனைகளை ஒழிப்போம், மனிதனாக முயற்சிப்போம்.
முடிந்தால் சிந்தியுங்கள்!
Tuesday, November 6, 2012
முடிந்தால் சிந்தியுங்கள் - 6!
அறிவியல் வளர்ச்சி என்பது என்ன ?
மக்களின் அடிப்படை தேவைகளுக்கான கண்டுபிடிப்புகள், சமகால பிரச்சனைகளுக்கான தீர்வுகள், இயற்கைக்கும் , மனிதத்திற்கும் பக்க விளைவுகள் ஏற்படுத்தாத வகையிலான மாற்று கண்டுபிடிப்புகள் ஆகியவையா அல்லது அறிவியல் தன்னை தானே கண்டுபிடித்து வளர்த்து கொள்வதா?
அறிவியல் சார்ந்து சிந்திக்க கற்று கொண்டுள்ள அறிவியல் வல்லுனர்களுக்கு மனிதம் சார்ந்து சிந்திக்க கற்று கொடுக்கப்பட்டுள்ளதா!
வியாபார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் சிறப்பாக செயல்பட தெரிந்த பெரும்பாலான அறிவியல் வல்லுனர்களுக்கு இயற்கைகாகவும் மனிதத்திர்காகவும் சிந்திக்க நேரம் இல்லாமல் போய் விட்டதா?
முடிந்தால் சிந்தியுங்கள்!
கிருஷ்ணர் பார்பனன், நரகாசுரன் நம் இனத்தவன்!
ஆஹா அடுத்து ஒரு புது பூதம் கிளம்பி தயாரா இருக்கு!
கிருஷ்ணர் பார்பனன், நரகாசுரன் நம் இனத்தவன் - கிருஷ்ணரே இல்லன்னு சொல்ற பலரே இதை பகிர்ந்து கொண்டிருக்கிறது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வளவு தானா உங்க டக்கு! பகுத்தறிவு என்பது இது தான் போல!
யப்பா சாமிகளா உங்க பார்ப்பன எதிர்ப்பை கொஞ்சமாவது அர்த்தத்தோட செய்யுங்க. கண்மூடி தனமா இப்படி பிரச்சாரம் செஞ்சிங்கனா நீங்கள் பார்பனர்கள் மேல வைக்கிற நியாயமான
கிருஷ்ணர் பார்பனன், நரகாசுரன் நம் இனத்தவன் - கிருஷ்ணரே இல்லன்னு சொல்ற பலரே இதை பகிர்ந்து கொண்டிருக்கிறது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வளவு தானா உங்க டக்கு! பகுத்தறிவு என்பது இது தான் போல!
யப்பா சாமிகளா உங்க பார்ப்பன எதிர்ப்பை கொஞ்சமாவது அர்த்தத்தோட செய்யுங்க. கண்மூடி தனமா இப்படி பிரச்சாரம் செஞ்சிங்கனா நீங்கள் பார்பனர்கள் மேல வைக்கிற நியாயமான
குற்றச்சாட்டுக்கள் கூட அநியாயாமா தான் தோனும். சமகால பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காணனும்னு யோசிக்க ஆரம்பிங்க, அத விட்டுட்டு தொட்டதுக்கு எல்லாம் பார்பனன் பார்பனனே பேசிக்கிட்டு திரிஞ்சா இன்னும் ஒரு ஆயிரம் வருஷத்துக்கு இப்படியே பேசிட்டு இருக்க வேண்டியது தான்.
# பிராமணம் என்று கூறி கொண்டு தீட்டு பார்பவனும், தலித் என்று சொல்லி கொண்டு அனைத்து பிராமணனையும் தீட்டாக பார்பவனும் எந்த விதத்தில் வேறுபட்டவன்? பிரச்சனை தெரிந்தோ, தெரியாமலோ ஒட்டி கொண்டு இருக்கும் ஜாதியில் இல்லை; பிற அடையாளங்களோடு உள்ளவனிடம் ஒட்டாமல் இருக்கும் மனங்களில் தான் உள்ளது!
# பிராமணம் என்று கூறி கொண்டு தீட்டு பார்பவனும், தலித் என்று சொல்லி கொண்டு அனைத்து பிராமணனையும் தீட்டாக பார்பவனும் எந்த விதத்தில் வேறுபட்டவன்? பிரச்சனை தெரிந்தோ, தெரியாமலோ ஒட்டி கொண்டு இருக்கும் ஜாதியில் இல்லை; பிற அடையாளங்களோடு உள்ளவனிடம் ஒட்டாமல் இருக்கும் மனங்களில் தான் உள்ளது!
Subscribe to:
Posts (Atom)