இதனால், இந்திய நாட்டை ஆளக்கூடிய சர்வ வல்லமை படைத்த காங்கிரஸ் கட்சியும் அதன் ஆதரவாளர்களும் தங்கள் மோப்ப சக்தியையும், அறிவு ஜீவிதனத்தையும் ஒரு சேர பயன் படுத்தி டைம் இதழுக்கும், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கும் உள்ள ஒற்றுமையை கண்டுபிடித்தாலும், சென்னையில் டைம் இதழ் ஸ்டாக் இல்லாத காரணத்தினாலும், அப்படியே கிடைத்தாலும் தற்போது உள்ள இந்திய பொருளாதார மந்த நிலையில் அதை விட குறைவான விலையில் கிடைக்கும் டைம்ஸ் ஆப் இந்தியாவை, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு யுவராஜின் தலைமையிலும் மற்றும் அவரது ஆத்மார்த்த குருவும், இன்றைய இந்திய ரூபாயின் மதிப்பில் 15 கோடிக்கு விலை போக கூடிய ஒரே மாப்பிளையான திரு ராகுல் அவர்களின் வழிகாட்டுதலின் பேரிலும், கசக்கி, கிழித்து, எரித்து டைம் இதழுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை வெற்றிகரமாக தெரிவித்து கொண்டு உள்ளனர் என்பதை தெரிவித்து கொள்கிறேன்...!
அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்
No comments:
Post a Comment