Wednesday, October 31, 2012

தமிழக காங்கிரஸின் ராஜதந்திரம் !




அப்போ:

நம்ம பிரதமரைப் போய் செயல்திறன் இல்லாதவர் என்று கூறி விட்டதே டைம் பத்திரிக்கை என்று கொதித்தெழுந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸார், டைம் பத்திரிகைக்குப் பதில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழைக் கிழித்துப் போராட்டம்!

இப்போ:

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினம் தொடர்பாக தமிழக காங்கிரஸ்  சார்பில் அனுப்ப பட்ட மின்னஞ்சல் செய்தியில் இந்திரா காந்தி என்பதற்கு பதிலாக  இந்திய மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் உயிரை கையில் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னை சோனியா காந்தி பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது!  

#நாலணா செலவில்லாமல் நாலாயிரம் விளம்பரம் தேடி கொள்கிற தமிழக காங்கிரஸின் ராஜதந்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது!

க க க போ!

என்ன வாழ்கைடா இது!


WTF, HOLY SHIT எல்லாம் "சோ கால்ட் மேட்டு குடியினர்" போகிற போக்கில சொல்லிட்டு போயிடலாம். ஆனா அதையே தமிழுல சொன்னா நாம அயோக்கியன்! 

#என்ன வாழ்கைடா இது!

நீடூழி வாழ்க "So Called ஜனநாயகம்!



இனி அரசியல்வாதிகளின் சொம்பு தூக்கிகள், ஆதிக்க ஜாதியினர், அதிகார வர்கத்தினர், பணம் படைத்தவர்கள் மட்டும் தங்கள் கருத்துகளை சமூக இணையத்தில் பதியலாம். மற்றவர்கள் இங்கே கடையை சாத்தி விட்டு பழையபடி குட்டி சுவத்தையோ, டீ கடை பெஞ்சையோ தேடி கொள்ளுங்கள், இல்லையேல் சுழிய குற்றத்திற்காக கலி தின்று கொண்டிருக்கும் தோழர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி சிறப்பு பயிற்சி எடுத்து கொள்ளுங்கள்!


#நீடூழி வாழ்க "So Called ஜனநாயகம்!

நோயும், பேயும்!

செய்தி: விவசாயிகளின் பரிதாப நிலையை போக்கவே சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு - அன்னை சோனியா ! 

தாய்நாட்டு நோயை போக்குவதற்கு அந்நிய நாட்டு பேயை இறக்குமதி செய்தானாம் ஒருத்தன்! 
இதையும் கேட்டு ஓகோ அப்படின்னு சொல்லி அமைதியா போறவன் உலக மகா கிறுக்கன்! 

http://hillpost.in/2012/10/22/fdi-in-retail-to-benefit-farmers-sonia-gandhi/53116/people/hp_bureau

அட்வைஸ் செய்து வாங்கி கட்டி கொள்ளாமல் இருக்க!

இருபத்தி நாலு மணி நேரமும் டி வி, பாட்டு, படம், பேஸ்புக்னு எதாவது ஒரு போதையிலயே அடிமையாகி கிடக்காதீங்க, அளவோட என்ஜாய் பண்ணுங்க, மத்த பிரச்சனைகளை பத்தியும் தெரிஞ்சிகோங்க அப்படின்னு தெரியாத்தனமா கூட யாருகிட்டயும் சொல்லிடாதீங்க!!  அப்பறம் சாடிஸ்ட், உலகம் தெரியாதவன், ரசனை இல்லாதவன், குறுகிய மனப்பான்மை உடையவன், மன நோயாளி, சைக்கு, புத்தி கேட்டவன், துப்பு கேட்டவன், பொறாமை புடிச்சவன், சுயநலவாதி, மத்தவங்க சந்தோஷத்த கெடுக்கிறவன், கொடுங்கோலன் இன்னும் பல சொல்ல கூடாத வார்த்தைகளில் எல்லாம் வாங்கி கட்டி கொள்ள வேண்டி வரும்
#பார்த்து சூதானமா நடந்துக்கோங்க!

முடிந்தால் சிந்தியுங்கள் - 5!

பார்ப்பனிய எதிர்ப்பு  என்பது "பார்ப்பனிய சிந்தனை" உடையவர்களை எதிர்ப்பதாக புரிந்து கொள்ள பட வேண்டும், அதை விட்டு பிறப்பால் பார்ப்பனனாக உள்ளவர்கள் அனைவரையும் எதிர்ப்பது மீண்டும் ஒரு சமூக அநீதிக்கே வழி வகுக்கும்.


முடிந்தால் சிந்தியுங்கள்!   

Friday, October 26, 2012

அரசியலும் வளர்ச்சியும்!

ஒரு தேரை இரண்டு குதிரைகள் இழுத்து செல்கின்றன, தேரின் இரு சக்கரங்களின் அருகிலும் மக்கள் கூட்டம், ஒரு சமயத்தில் ஒரு சக்கரத்தின் அச்சாணி கழன்று அந்த பக்கம் உட்காந்திருந்த மக்கள் உயிருக்காக மரண ஓலத்தை எழுப்பி கொண்டிருகிறார்கள். இரண்டு குதிரைகளும் மக்களின் மரண ஓலத்தை பொருட்படுத்தாமல் நிற்காமல் தறி கெட்டு ஓடி கொண்டிருகிறது.

இதில் ஒரு குதிரையின் பெயர் வளர்ச்சி, மற்றொன்றின் பெயர் அரசியல், ஒரு பக்கம்      அச்சாணி கழன்ற சக்கரம், மறு பக்கம் அச்சாணி கழலாத சக்கரம் என்பது பொருளாதார ஏற்ற தாழ்வு (இடைவெளி), அச்சாணி கழன்ற பக்கத்தின் உட்கார்ந்திருந்த மக்கள் இந்தியாவின் BPL (Below Poverty Line) என வரையறுக்க படும் வாழ்வதற்கும் வழி தெரியாமல், சாவதற்கும் அனுமதிக்க படாமல் தினம் தினம் மரண ஓலத்துடன் வாழ்கையை சந்திக்கும் அப்பாவிகள்.

#இந்த நிலையை புரிந்து கொள்ளாமல் அரசியல் பற்றியோ, சமுகம் பற்றியோ, வளர்ச்சி பற்றியோ பேசுவது எந்த விதத்திலும் பலன் தராது.

Wednesday, October 24, 2012

வளர்ச்சி!

நாற்பது சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதற்கும் வழி தெரியாமல், சாவதற்கும் அனுமதிக்கபடாமல், விரக்தியுடன், நடை பிணமாக வாழ்வதற்கு பெயர் தான் வளர்ச்சி.

சுயங்கள் !

சுயத்தின் சுயங்கள் சுயமாக ஒழிக்கப்படும் போது, 
உலகத்தின் வளங்கள் வளமாய் வளர்கப்படுகிறது!

மின்னலும், இடியும் !

ஆயிரம்  கோடி கோளாரிருக்க அவையனைத்தை விட்டு இதை மட்டும் நோக்கும் இவன் பொய்யன் என்றாய் -
ஆயிரம் ஆயிரம் நானிருக்க அவனையெல்லாம் விட்டு என்னை மட்டும் நோக்கும் நீ!
உன்னிடம் அதிகம் பேச ஒன்றும் இல்லை, 
ஆயிரம் கோடி ஆண்டு அறியாமை வரலாற்றின் இன்றைய எச்சம் தான்  நீ!

ஆயிரம் கோடி துளி விஷத்துளிகளில் எதன் வீரியம் அதிகம்?   
நீ உட்கொண்டது உனக்கானது, நான் உட்கொண்டது எனக்கானது!
ஆயிரம் கோடி கோளாறில் எதன் பாதிப்பு அதிகம்?
நீ உணர்ந்தவை உனக்கானது, நான் உணர்ந்தவை எனக்கானது! 

மின்னலும், இடியும் ஒன்றாம் - 
ஆனால் அதை பார்ப்பதும் கேட்பதும் ஒட்டமறுக்கிறது!
நான் பார்ப்பது என்னை உந்தி தள்ளுகிறது - 
கேட்பவைகள் என்னுள் புகுந்து கொள்ளு(ல்லு)கிறது,
உந்திய விசைகள் என்னை நடத்துகிறது - 
புகுந்தவை என்னுள் நடக்கிறது,
நான் பார்த்தவைகள் என்னை நடத்தியதை போல -
அவன் அவன் பார்த்தது அவன் அவனை நடத்தினால் போதாதோ? 

#சமூக பிரச்சனைகளை அணுகுதல்!

எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!

அழிவின் மொத்தம் என்றேன் - நாட்டின் பாதுகாப்பு என்றாய்,
மனிதத்தை சிதைக்கும் என்றேன் - அறிவியல் வளர்ச்சி என்றாய்,
எதிர்காலத்தை தொலைப்போம் என்றேன் - பொருளாதார எழுச்சி என்றாய்,
நோயுற்று சாவோம் என்றேன் - மின்விசிறி ஓடவேண்டும் என்றாய்,
எத்தனை வெட்கம் கெட்டவனடா நீ!

சரியும், தவறும்!

"சரியாக செய்யப்பட்ட தவறை" - சரி என்றும், "தவறாக செய்யப்பட்ட சரியை" - தவறு என்றும் சாதாரண மக்கள் புரிந்து கொள்வது ஒன்றும் அசாதரணமானது அல்ல, அவர்கள் வாழ்வியலோடும், புரிதலோடும் ஐக்கியப்பட்ட ஒன்று இந்த மேலோட்ட நிலை. ஆனால் சமூகத்தை கூர்ந்து நோக்க கூடிய "So Called சமூக போராளிகள்" இதை போன்றதொரு மேலோட்டமான நிலைபாட்டை எடுப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

சமூக நீதி!

அனைவருக்கும் சமமான ஒன்றை தான் சமூக நீதி என்று சொல்லி கொள்ள முடியும், பிரபலங்களுக்கும், பணம் படைத்தவருக்கும், பதவியில் இருப்போருக்கும், பலம் கொண்டோர்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை சமன் செய்ய அவசர அவசரமாக வாங்கி தரப்பட்ட (அ)நீதியை சமூக நீதியாக மார்தட்டி கொண்டாடுவது வேடிக்கையாகவே உள்ளது

Wednesday, October 10, 2012

மாற்று அரசியல் !

அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த புரிதல் மக்களிடம் அந்நியப்பட்டு போய் விட்டது. அரசியல் மற்றும் சமூகம் இன்றி தனி மனிதனாக யாரும் வாழ்ந்து விட முடியாது என்ற உண்மையை மக்கள் உணர ஆரம்பித்தாலன்றி அரசியல் நிலைபெறாது. கேள்விகளில்லாத விடைகள் அர்த்தமற்றவை, முதலில் கேட்க பழகுவோம், நமக்காக மட்டும் அல்ல, அனைவருக்காகவும், புரிதலை வளர்த்து கொள்வோம், சித்தாந்தங்களை வகுத்து கொள்வோம், தவறுகளை திருத்தி கொள்வோம், பிரச்சனைகளுக்கான தீர்வுகளை விவாதிப்போம், மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்போம், அரசியல் மாற்றத்தை மட்டுமே கண்டுணர்ந்த சமூகத்தை மாற்று அரசியலையும் காண செய்வோம்!