Wednesday, August 31, 2011

தேடிச் சோறு நிதந்தின்று


தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

-பாரதி

நல்லதோர் வீணைசெய்தே - பாரதி


நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் - சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
-பாரதி

Saturday, August 27, 2011

How Our Mind Can Do Amazing Things!

TH15 M3554G3
53RV35 TO PR0V3 H0W 0UR M1ND5 C4N D0 4M4Z1NG TH1NG5! 1MPR3551V3 TH1NG5! 1N TH3
B3G1NN1NG 1T WA5 H4RD BUT NOW, ON TH15 LIN3 YOUR M1ND 1S R34D1NG 1T
4UT0M4T1C4LLY W1TH OUT 3V3N TH1NK1NG 4B0UT 1T, B3 PROUD! 0NLY C34RT41N P30PL3
C4N R3AD TH15. R3 P05T 1F U C4N.

தூக்கு - செய்யாத தவறுக்காக, விசாரிக்கபடாத குற்றத்திற்காக, இல்லாத சட்டத்திற்காக!


இந்த பதிவை நான் எழுதியதின் நோக்கம் விடுதலை புலிகளின் மேல் இருக்கும் அனுதாபமோ, தமிழன் என்ற உணர்வோ, தூக்கு தண்டனை தேவை இல்லை என்று வலியுறுத்துவோ மட்டும் இல்லை, உண்மையை சொல்ல போனால் விடுதலை புலிகளின் மேல் இருக்கும் அனுதாபத்தை விட, காந்தி பிறந்த மண்ணில் பிறந்ததிற்காக நான் அதிகம் பெருமை பட்டு இருக்கிறேன், தமிழ் மொழி உணர்வும், இந்திய தேசிய உணர்வும் என்னுள் இரண்டற கலந்து உள்ளது, தமிழ் எனது தாய் மொழி , இந்தியா எனது தாய் நாடு,  ராஜீவ் கொலை குற்றவாளிகளாக தீர்பளிக்கப்பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை அளிப்பது சரியல்ல என்று இந்த பதிவை எழுதிய நான், நாட்டில் மனிதர்களுக்கு இடையில் இருக்கும் மிருகங்கள் அடையாளம் காண பட்டு, வேரறுக்க பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன், அதே நேரத்தில், செய்யாத தவறுக்காக, முழுவதும் விசாரிக்கபடாத குற்றத்திற்காக, நடைமுறையில் இல்லாத சட்டத்திற்காக, ஒரு சிலரின் லாபத்திற்காக ஒருவர் கூட தீங்கிழைக்கபட கூடாது என்பதிற்காக தான் இந்த பதிவு்.

 ராஜீவ் கொலையில் தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தீர்பளிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது, அதே சமயத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தங்கபாலு போன்றோர்கள், ஒரு சில விடுதலை புலி ஆதரவாளர்களால் தூண்டி விட பட்டு நடத்தபடுகிற போராட்டமாக இதை சித்தரித்து கொண்டிருகிறார்கள், இதை பற்றி நான் படித்து, கேட்டு, உணர்ந்த சில விடயங்கள் உங்கள் பார்வைக்கு!

முதலாவதாக, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தடா சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாக தீர்பளிக்கப்பட்டகள் என்று முன்னரே கூறி இருந்தேன், தடா சட்டம் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!
Terrorist and Disruptive Activities (Prevention) Act என்பதின் சுருக்கம் தான் TADA
தடா சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டோர் காவல் அலுவலரின் முன்னிலையிலேயே குற்ற செயலை ஒத்துகொள்ளவேண்டும், இதன் பொருட்டு அவர்களின் துன்புறுத்தலில் நீதிமன்றம் தலையீடாது. அவர் ஒத்துகொண்டதையே சாட்சியாக நீதிமன்றம் எடுத்துகொள்ளும், குற்றம் சுமத்தபட்டவர்கள் தாங்கள் நிரபராதி என்று நிரூபிக்க இந்த சட்டத்தில் எந்த வாய்ப்பும் இல்லை. வாக்கு மூலம் தவிர வேறு எந்த வித ஆதாரங்களும் இல்லாமல் குற்றவாளிகள் தண்டிக்க படலாம். இந்த சட்டம் ஆங்கிலேய ஆட்சியில் இருந்த, மகாத்மாவால் கடுமையாக சாடப்பட்ட Rowlatt Act க்கு நிகராக கருதப்பட்டதால் 2002 - 2004 ல் பதவியில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இரத்து செய்யப்பட்டது. குளறுபடியான ஒரு சட்டம் என்று இரத்து செய்யப்பட்ட ஒரு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு கொடுத்த தண்டனை தான் இப்பொழுது நிறைவேற்ற பட இருக்கிறது! இது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஒரு இழுக்காக கருதபடுகிறது. இந்த ஒரு அடிபடையிலயே இந்த போராட்டங்கள் வெறும் உணர்வு பூர்வமானது மட்டும் இல்லை என்பது தெளிவாகிறது! 

இரண்டாவது, ராஜீவ் கொலையை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையின் படி இந்த கொலை விசாரணை இன்னும் முடிவுக்கு வரவில்லை, குண்டு தயாரித்தது யார், அதில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், போன்ற பல கேள்விகளுக்கு இன்னும் பதில் எட்டப்படவில்லை. ஆக முழுவதுமாக முடிவுக்கு வராத ஒரு விசாரணையின் பேரில் தான் இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 

மூன்றாவது, ராஜீவை கொலை செய்ததாக விடுதலை புலிகளோ, குற்றவாளிகள் என்று கருதபடுபவர்களோ இன்று வரை, எந்த நேரத்திலும் பொறுபேற்கவில்லை. 

நான்காவது, ராஜீவ் கொலை நடந்த நேரத்தில் எந்த ஒரு மத்திய, மாநில காங்கிரஸ் தலைவர்களும் இறக்கவில்லை, ஏன் ஒரு சிறு காயம் கூட படவில்லை. ஒரு நாட்டின் பிரதம மந்திரி பங்கேற்கும் ஒரு அரசு பொது விழாவில் அவருக்கு அருகில் எந்த ஒரு காங்கிரஸ் தலைவரும் இல்லாதது ஏன் என்ற கேள்விக்கு இன்று வரை விடை காண யாரும் முன் வரவில்லை!

ஐந்தாவது, இலங்கையில் அமைதியை ஏற்படுத்த அனுப்பிய இராணுவத்தின் மூலம் இலங்கையின் பெருங்கோபதிற்கு ராஜீவ் ஆளானர், இலங்கையில் ராஜீவ் பங்கேற்ற விழாவில் ஒரு சிங்கள ராணுவத்தால் தாக்கப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து இருக்க முடியாது, இலங்கைக்கும் ராஜீவ் கொலையில் தொடர்பு இருக்க வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இந்த கோணத்திலும் பெரிதாக விசாரணை எதுவும் நடத்தபடவில்லை. 

ஆறாவது, கே.ஆர். நாராயணன் மற்றும் அப்துல் கலாம் ஆகிய பிரதமர்கள் சட்ட குளறுபடிகளின் காரணமாக வழங்க பட்ட தீர்ப்பு என்பதாலும், கருணை அடிப்படையிலும் இந்த மூவரின் தூக்கை நிறுத்தி வைத்து இருந்தார்கள். காங்கிரசின் கைபாவையாக செயல்படும் பிரதிபா பாட்டில் அவசர அவசரமாக இந்த தூக்கை உறுதிபடுத்தி இருப்பது, இந்த வழக்கை சீக்கிரம் முடித்து, உண்மையை மறைத்து, மக்களை திசை திருப்பி,  காங்கிரஸ் தலைமை நிம்மதி பெரு மூச்சு விடுவதற்காக இருக்கலாம்!  

ஏழாவது, ராஜீவ் கொலை குற்றவாளிகளாக கருத படும் யாரும் பயங்கரவாதிகள் இல்லை, அனைவரும் குடும்ப வாழ்கையில் ஈடுபட்டு வந்தவர்கள், அவர்கள் மேல் எந்த ஒரு பயங்கரவாத பின்னணியும் இல்லை, அவர்கள் மேல் இருக்கும் குற்றம் கூட முக்கிய குற்றவாளியான சிவராசனுக்கு பாட்டரி வாங்கி கொடுத்தது என்பது தான், சிறைக்குள் இருந்த நாட்களில் அவர்கள் நன்னடத்தையுடன் தான் இருந்து உள்ளனர்,  செய்யாத குற்றத்திற்காக வாழ்கையை இழந்து, பந்த பாசங்களை இழந்து தவித்து கொண்டுள்ள அவர்களுக்கு இதற்கு மேலும் தண்டனை தேவையா? 

செய்யாத தவறுக்காக, முழுவதும் விசாரிக்கபடாத குற்றத்திற்காக, நடைமுறையில் இல்லாத சட்டத்திற்காக, ஒரு சிலரின் லாபத்திற்காக வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனை அவசியம் தானா?

இந்த குளறுபடிகளை கருத்தில் கொண்டு, இந்த மூவரின் தூக்கு நிறுத்தபட்டால் மக்களுக்கு சட்டத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை அழியாமல் காக்கப்படும், இல்லையேல்! இலங்கை போரில், லட்சம் லட்சமாய் பச்சிளம் குழந்தைகளையும், அப்பாவி பெண்களையும் சதை பிண்டங்களை பார்த்து பழகிய மனதிற்கு கூடுதலாக மூன்று அப்பாவிகளின் பிணங்களை பார்பதினால் பெரிய கேடு ஒன்றும் விளைந்து விட போவதில்லை!

 வி. எஸ். வினோத் குமார்

முடிந்தால் சிந்தியுங்கள்!


இலங்கையுடனான உறவை, எக்காரணம் கொண்டும் கெடுத்துக் கொள்ள, இந்தியா தயாராக இல்லை. கச்சத்தீவு முடிந்து போன விஷயம். திரும்பவும் பேச முடியாது. போர்க்குற்றம் குறித்து இலங்கையே விசாரிக்கும் : கிருஷ்ணா

தினமலர் செய்தி - ஆகஸ்ட் 26 , 2011.  

இந்த திறமையான காங்கிரஸ் தலைமையிடம் இருந்து அடுத்து என்ன மாதிரியான அறிக்கைகள் வரலாம் என்று ஒரு சின்ன ஊகம்!

->2ஜி ஊழலை ராஜா தலைமையில் தி.மு.க விசாரிக்கும்!
->காமன் வெல்த் ஊழலை கல்மாடி தலைமையில் காங்கிரஸ் விசாரிக்கும்!
->சத்யம் முறைகேட்டை பற்றி ராமலிங்க ராஜு விசாரிப்பார்!
->சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்பு பணத்தை பற்றி, ஹசன் அலி தலைமையில் அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களே விசாரிப்பார்கள்!
->பத்திரத்தாள் முறைக்கேட்டை தெல்கி விசாரிப்பார்!
->போபர்ஸ் ஊழலை ஒத்தோவியோ குவாத்ரோச்சி விசாரிப்பார்!
->மும்பை தீவிரவாத தாக்குதல்களை பற்றி அஜ்மல் கசாப் விசாரிப்பார்!

மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு கச்சத்தீவு முடிந்து போன விழயமாக இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் வாழும் நம்மை போன்றோருக்கு காஷ்மீரும், அருணாச்சல் பிரதேசமும் கூட முடிந்து போன விழயமாக இருப்பதில் தப்பு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை! இலங்கையை விட பல மடங்கு பலம் வாய்ந்த நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் உடனான உறவை மட்டும் ஏன் கெடுத்து கொள்ள வேண்டும்! தனி மனிதர்களுக்கு மட்டும் தான் இறையான்மையா, மத்திய அமைச்சர்களுக்கு கிடையாதோ! அநியாயங்களை கண்டும் காணாமல் இருப்பதற்கு பெயர் தான் வெளிஉறவு கொள்கையா? அகிம்சையையும், ஆன்மிகத்தையும் உலகுக்கே போதித்த இந்தியாவுக்கு, காங்கிரஸ் அரசின் இந்த போக்கு உலக அரங்கில் அவமானத்தை தேடி தராதா? இந்த பச்சோந்தி கொள்கைகளால் நாம் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகுவோம் என்பது இந்த அரசுக்கு தெரியாதா! 

முடிந்தால் சிந்தியுங்கள்! 

அன்புடன், 
வி. எஸ்.  வினோத் குமார்

Sunday, August 21, 2011

நாட்டோட ரகசியத்த எப்படி எல்லாம் பாதுகாக்கறோம்!

சீனாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை!

இந்தியால கூட தான் பொது இடத்துல புகைபிடிக்க தடை இருக்கு, யாராலயாவது கண்டு பிடிக்க முடிஞ்சதா? 
நாட்டோட ரகசியத்த எப்படி எல்லாம் பாதுகாக்கறோம்!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

டிப்லோமசி!

நெறைய பத்திரிக்கையில 'நண்பன்' ஒசாமாவை உருவாக்கி, 'எதிரி' ஒசாமாவை அழித்த அமெரிக்கானு எழுதிட்டு இருக்காங்க, இத பார்த்து யாரும் அமெரிக்காவ தப்பா நெனைச்சுக்காதீங்க, இதுக்கு பேரு தான் டிப்லோமசி (Diplomacy), இந்த மானம் கெட்ட தனத்துக்கு பேரு தான் டிப்லோமசி. எங்க சொல்லுங்க பார்க்கலாம் டிப்லோமசி!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

உறவுகளை வளர்ப்போம்!

உறவுகள், நட்பு, அன்பு போன்ற உன்னதமான விழயங்களை புறக்கணித்து விட்டு பணத்தை தேடி நாம் முன் வைக்கும் ஒவ்வொரு அடியும் நமக்குள், நாமே வளர்த்து கொள்ளும் தீவிரவாதம். நம் தலைமுறையிலே பக்தி, அன்பு, வெட்கம், அழுகை, துடிப்பு, நெகிழ்வு, பவ்யம் போன்ற பல உணர்வுகளை இழந்து, வெறும் உதட்டளவு சிரிப்பு, காமம், வெறி, பயம் போன்ற வெகு சில உணர்வுகளை கொண்ட, நாகரீக வளர்ச்சி குறைந்த மனித பிண்டங்களாய் உலாத்தி கொண்டு இருக்கிறோம், இந்த நிலையின் முடிவு, மனித இனத்தின் நாகரீகம் அற்ற, ஒருவனை ஒருவன் கொன்று சாப்பிடும் முதல் நாளாக தான் இருக்க முடியும்! Facebook, Orkut, போன்ற வலை பின்னல்களில் மாயையான நட்பை தேடுவதில் சிறிது நேரத்தை உங்கள் உறவுகளுடனான பாச வலை அறுபடாமல் இருக்க செலவு செய்யுங்கள்!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

முதுகெலும்பில்லா அரசியல்வாதிகள்!

நெஞ்சை நிமிர்த்தி மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய அமைச்சர்கள், கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்பு தலை வணங்கி அறிமுகம் செய்து கொள்ளும் கலாச்சாரம் இன்னும் நம் நாட்டுக்கு தேவையா? நெஞ்சை நிமிர்த்தி, சுய கவுரவத்துடன் மரியாதையை செலுத்தும் பழக்கத்தை யார் இவர்களுக்கு சொல்லி தருவது!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

மானுடம் தோற்குதம்மா!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனிதாபிமானத்தை வளர்க்க அவசியமில்லாமல் போய்விட்டது, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு மனிதாபிமானத்தை சொல்லி தர நேரமில்லாமல் போய்விட்டது, சமுதாயம் அதன் உறுப்பினர்களுக்கு மனிதாபிமானத்தை புரிய வைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பணமும், பதவியும், கேளிக்கையும் மட்டுமே புரிந்த உணர்விழந்த ஜடத்திடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது, பசித்திருக்கும் சிங்கத்திடம் முயல் நட்பை எதிர் பார்ப்பதை காட்டிலும் வேடிக்கையானது!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதி இருந்திருந்தால், இந்த கேடு கேட்ட மானுடத்தை சகித்து கொள்ள முடியாமல் தன்னை தானே அழித்து கொண்டிருப்பான்!
பொருந்தா பொருளாதரத்தையும், முறையில்லா வளர்ச்சியும் தலை மேல் தூக்கி வைத்து ஆடும் விட்டில் பூச்சிகளாக மாறி விட்ட மானுடத்தை கண்டு வேதனை மட்டும் தான் பட முடியும் போலிருக்கிறது!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

உலகத்தை சுருக்கி விட்டோம்!




உலகத்தை சுருக்கி விட்டோம், 
உலகத்தை சுருக்கி விட்டோம்!

மனங்களை தூரபடுத்தி, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

இதயத்தை அப்புறபடுத்தி, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

மனசாட்சியை அடகுவைத்து, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

வாழ்வியலை வேரறுத்து, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

உண்மையை உதாசீனபடுத்தி, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

இயற்கையை இம்சித்து ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

மனிதத்தை மறந்துவிட்டு, ஆம்
உலகத்தை சுருக்கி விட்டோம்!

உலகத்தை சுருக்கி விட்டோம், உண்மைதான்
உலகத்தை சுருக்கி விட்டோம்! 

அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

Tuesday, August 16, 2011

ஒளிர்கிறது தேர்தல் முடிவுகள், ஒளிருமா தமிழ்நாடு - 2 ?!


செல்வி ஜெயலலிதாவும், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி ஏற்றாகிவிட்டது, முப்பத்தி நான்கு பேர் கொண்ட ஒரு வலிமையான அமைச்சரவை நமது மாநிலத்தில் உருவாக்கபட்டிருகிறது. சட்டம் படித்த ஒருவரிடம் சட்டத்துறை ஒப்படைக்கப்படவில்லை என்பதை தவிர மற்ற அனைத்து துறைகளும் தகுதியானவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக பெரும்பாலானோர் நம்புகின்றனர். பெரும்பாலான அமைச்சர்கள் புது முகங்களாக இருப்பது ஆட்சியிலும் புதுமைகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டம் படித்த ஒருவரிடம் சட்டத்துறை ஒப்படைக்கபடாதது சிறிய ஏமாற்றத்தை கொடுத்தாலும், அது சரியான முடிவா, தவறான முடிவா என்பதை அவரது செயல்பாடுகளை பார்த்த பிறகு தான் நம்மால் உணர்ந்திட முடியும். எந்த வித கல்வி தகுதியும் இல்லாமல், ஈடு இணையற்ற ஆளுமை திறனுடன், மக்கள் தேவையை சரியாக புரிந்து நலத்திட்டங்களை தீட்டிய மகான்கள் வாழ்ந்த நாட்டில் நாம் இருப்பதால் இதை ஒரு பெரிய தவறாக கருத வேண்டிய அவசியம் இல்லை. எல்லா நிகழ்வுகளும் சரியாக நடக்கும் போதும் ஆங்காங்கே சில சில நெருடல்கள் இருக்க தான் செய்கிறது, நெஞ்சை நிமிர்த்தி மக்களுக்காக தொண்டாற்ற வேண்டிய அமைச்சர்கள், கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்பு தலை வணங்கி அறிமுகம் செய்து கொள்ளும் கலாச்சாரம் இன்னும் நம் நாட்டுக்கு தேவையா? நெஞ்சை நிமிர்த்தி, சுய கவுரவத்துடன் மரியாதையை செலுத்தும் வழக்கத்தை யார் இவர்களுக்கு சொல்லி தருவது? என்று பதவி ஏற்பு விழாவை கண்ட எந்த ஒரு தன்மானமுள்ள தமிழனும் வேதனை கொண்டிருப்பான். எதிர் கட்சி தலைவராக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவரது பணியை சிறப்பாக செய்வார் என்ற நம்பிக்கை, தமிழக வாக்காளர்கள் அவர் மேல் வைத்து இருக்கும் நம்பிக்கையின் மூலம் நமக்கும் தொற்றி கொள்கிறது. தினகரன், முரசொலி போன்ற தி.மு.க சார்ந்த ஊடகங்கள் தவிர அனைத்து ஊடகங்களும் இந்த கூட்டணியின் வெற்றியை கொண்டாடுவது எதோ அந்நிய சக்தியின் பிடியில் இருந்து நாடு விடுதலை அடைந்ததை போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஊடகங்களின் இந்த ஒற்றுமை நமக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், அடுத்து வர போகும் நாட்களில், இவை ஆளும் கட்சியின் ஜால்ராவாக மாறாமல் கண்ணியத்தோடும், சுய கவுரவத்துடனும் செயல் பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்களின் சார்பாக இந்த தொடரின் மூலம் வைக்க கடமை பட்டுள்ளோம். நல்லதொரு சட்டசபை உருவாகி விட்டது, அடுத்து என்ன? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தானே! சரி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்துவதுக்காக கொடுக்கபட்டவையா? அப்படி இல்லை என்றால் அவற்றில் எத்தனை வாக்குறுதிகளை குப்பையில் போடலாம்? வாக்குறுதிகளை நிறைவேற்றும் அளவுக்கு கஜானாவில் பணம் உள்ளதா? வாக்குறுதிகளில் இருப்பதை தவிர வேறு என்ன என்ன மக்கள் பிரச்சனைகள் உள்ளது? தனி மனித பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்துவதுக்காக என்ன என்ன செயல் திட்டங்கள் நடைமுறை படுத்த இருக்கிறது? விலைவாசி உயர்வு கட்டுபடுத்த படுமா? மின் உற்பத்தி பெருக்கப்படுமா? மீனவர் நலன் காக்கப்படுமா?  பல ஆண்டுகளாக தீர்க்கபடாமல் இருக்கும் மாநில அளவிலான நதி நீர் பிரச்சனையும், சர்வதேச அளவிலான ஈழ தமிழர் பிரச்சனையும் இந்த அரசாங்கத்தின் மூலம் தீர்வு எட்டப்படுமா? இப்படி எண்ணில் அடங்கா கேள்விகள் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் கணையாய் துளைத்து கொண்டு இருக்கிறது. 

- மேலும் பேசுவோம்...

அன்புடன், 
வினோத் குமார்.

கருத்துகள் வரவேற்கபடுகிறது!

ஒளிர்கிறது தேர்தல் முடிவுகள், ஒளிருமா தமிழ்நாடு - 1 ?!


சிலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் கொடுத்த தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு மைல் கல், ஜனநாயகத்தின் ஒப்பில்லா அதிசியம்.. பண பலம், ஊடக பலம், செல்வாக்கு, ரவுடியிசம், இலவசங்கள், ஜாதி வாக்குகள், குலதெய்வத்தின் மேல் சத்தியம் போன்ற அனைத்தையும் உடைத்தெறிந்து ஜனநாயகம் விண்மீனை போல ஒளிர்கின்றது. ஒரு கட்சி அறுபது வருடங்களாக சேர்த்த செல்வாக்கை ஒரே தேர்தலில் உடைத்தெறிந்து ஜனநாயகம் தன்னை மேலும் அழகாக்கி கொண்டது.  எங்கும் முறைகேடு, எதிலும் முறைகேடு என்று ஆட்சி செய்து வந்த தி.மு.காவை வேரறுத்தது ஒரு வகையில் சந்தோஷத்தை கொடுத்தாலும், இந்த நல்லதொரு தொடக்கத்தை அ.தி.மு.க எப்படி எடுத்து செல்ல போகிறது என்ற ஆவலும், எதிர்பார்ப்பும் மேலோங்கி இருக்கிறது, கூடவே எந்த தவறும் நடந்து விட கூடாது என்ற கவலையும், அப்படி நடக்கும் பட்சத்தில் அதை தடுக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. ஜனநாயகத்தின் மூலம் ஒளிர்ந்த தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டை, இந்தியாவில் ஒரு முன்மாதிரி மாநிலமாக ஒளிர வழி செய்ய வேண்டும் என்ற ஏக்கம் பெரும்பாலான மக்களிடையே உள்ளது. தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவது ஓரிரு நாட்களிலோ, மாதங்களிலோ நடக்க கூடிய விழயம் அல்ல என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் ஜெயலலிதா போன்ற ஒரு சிறந்த தலைவரால் இதை மூன்று, நான்கு வருடத்தில் கண் முன் நிறுத்தி விட முடியும் என்பதில் பலர் அசாத்திய நம்பிக்கை கொண்டுள்ளனர். அ.தி.மு.க தலைவர் ஜெயலலிதா சிறிது அதிக பொறுப்புடனும், நன்றியுடனும், கண்டிப்புடனும் செயல்பட்டால் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் சரி செய்து தமிழகத்தை ஓரிரு வருடங்களிலயே  வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல முடியும், அடுத்த சில வருடங்களில் தமிழகத்தை ஒரு முன்மாதிரி மாநிலமாகவும் மாற்ற முடியும்.  நமது அடுத்த முதல்வருக்கு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதுடன் நமது தொப்புள் கொடி உறவான, ஈழ தமிழர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. சிறந்த நிர்வாகம், மக்கள் நல திட்டங்கள், தனி மனித பொருளாதார மேம்பாடு, சட்டம் ஒழுங்கு, விவசாயம், கல்வி,  தொழில் மேம்பாடு போன்ற பல விழயங்கள் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தூண்களாக நின்று ஒளிர செய்யும். அவற்றில் அவசியமானதாக, பல துறைகளில் உள்ளவர்களின் எதிர்பார்பாக இருக்க கூடிய சில கருத்துகளை பின் வரும் பகுதிகளில் அலசுவோம்.

- தொடரும்..

அன்புடன், 
வினோத் குமார்.

கருத்துகள் வரவேற்கபடுகிறது!

Birth Day of Non-Violence, Love, Peace, Spiritualism and Death day of Deadly Weapons!


India, the spiritual capital of the world, given birth to Non-Violence and proved Peace cannot be brought through Firepower, the silence which is brought through Firepower is not peace, but the death of Humanity. Many Great Leaders across world accepted what India taught as the King of Weapons, but we still hold the firepower and increasing it every day. We feel proud everyday for giving birth to technollogically advanced weapons, display it to the world and make them fear, but we failed to display the power of Non-Violence to the world and bring Love, Peace, Spirutalism among the countries and make the world as 'A Place to Live' and it is no more A Place to Die! We spend more than lakh crore rupees a year to improvise our fire power, but failed to spend a  penny to teach Non-Violence to the world! We celebrate Abdul Kalam everyday for bringing technological advancements in weapons, but we failed to celebrate Mahatma who had given a greatest identity to our country. Mahatma is living only in memory, but died in our thoughts and actions. We should lead the world, display love, peace, spirutalism by teaching Non-Violence and make every country to give farewell to all the deadly weapons. Let us all celebrate our Independence day as the Independence Day for the world from all the deadly weapons, Let us all celebrate the Birth Day of Non-Violence, Love, Peace, Spiritualism and Death day of Deadly Weapons. 

Happy Independence Day. Jai Hind.

With Love,
V. S. Vinoth Kumar

சுதந்திரம் கொண்டாடுவதற்கு அல்ல!


1806 'ல் வேலூர் கோட்டையில் ஆரம்பித்து நூற்றிநாற்பது வருடங்களுக்க மேலாக இலட்சகணக்கான உயிர் தியாகத்தில் கிடைத்தது சுதந்திரம்,  நாற்பது கோடி இந்தியர்களின் அடிமை சங்கிலியை உடைத்து எறிந்ததின் மூலம் கிடைத்தது சுதந்திரம், கிட்டதட்ட ஓராயிரம் ஆண்டுகள் அடிமைப்பட்டு, அசிங்கப்பட்டு கிடந்த ஒரு இனத்தை சுய கவுரவத்தோடு வாழ வைத்தது சுதந்திரம் , ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்ற மஹாகவியின் ஆதங்கத்தை ஏற்று ஒவ்வொரு இந்தியனும் வேற்றுமைகளை மறந்து  ஓரணியில் நின்று போராடி கிடைத்தது சுதந்திரம், ஆயுத பலத்தின் மூலம் உலகை வென்று விட முடியும் என்ற வளர்ந்த நாடுகளின் அகங்காரத்தை, மகாத்மா என்ற ஒரு தனி மனிதரின் அகிம்சை என்ற தொலைநோக்கு சிந்தனையால் தவிடு பொடியாக்கி வென்றெடுத்தது சுதந்திரம்,  இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் விடுதலை வேட்கையோடு, உயிரை துச்சமாக மதித்து, பின் வரும் சந்ததியாவது விடுதலை இந்தியாவில் வாழ வேண்டும் என்ற ஏக்கத்தில் பிறந்தது சுதந்திரம்,  வீழ்ந்தோம், எழுவோம்,  வீழ்ந்தோம், எழுவோம், ஒரு முறை வீழ ஒன்பதாய் எழுவோம், விஸ்வரூபம் எடுப்போம் என்று மண்ணில் மடிந்து வீழ்ந்தவரெல்லாம் விதைகளாய் மாறி போராடி போராடி கிடைத்தது சுதந்திரம்.
அறுபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து அந்நிய நாட்டு பணத்துக்கும், கேளிக்கை களியாட்டங்களுக்கும் தனது சூடான இளம் இரத்தத்தை அடிமைபடுத்தி கொண்டுள்ள ஒரு சமுதாயம், பணத்தை தேடி ஓடி ஓடி குடும்பத்தையும், வாழ்கையும், சமுகத்தையும் மறந்து மரத்து போன ஒரு சமுதாயம், பிறரின் நஷ்டத்தில் இலாபம் தேடி கொள்கின்ற ஒரு சமுதாயம், சுதந்திரத்தின் மூலம் ஒன்றிணைந்த வேற்றுமைகளை அரசியல் இலாபத்திற்காக மறுபடியும் பிரித்து கொண்டிருக்கிற ஒரு சமுதாயம்,  பதவி மற்றும் பண பலத்தின் மூலம் நாட்டையே முட்டாளாக்கி சுவிஸ் வங்கியில் இலட்சம் கோடிகளாக பணத்தை சேர்த்து கொண்டிருக்கும் ஒரு சமுதாயம், ஒரு வேலை உணவுக்கு திண்டாடி, பிறந்ததே பூமிக்கு பாரம் என்றெண்ணி தினம் தினம் வறுமையாலும், பசியாலும் போராட தெம்பில்லாமல் உயிரை முடித்து அநாதை பிணங்களாக மாற காத்திருக்கும் அதே நாற்பது கோடி இந்தியர்கள் கொண்டஒரு சமுதாயம் !

இதற்காகவா இத்துணை உயிர் தியாகங்கள்? இதற்காகவா இத்துணை போரட்டங்கள்?  இது தானா சுதந்திரத்தின் போது இருந்த நாற்பது கோடி இந்தியர்களின் ஏக்கம்? இது தானா சுதந்திர உணர்வோடு, உயிரை துச்சமாக எண்ணி நமக்காக போரடியர்வர்களுக்கு நாம் தரும் பரிசு? 

என்ன வளம் இல்லை நம் நாட்டில், உலகத்திற்கே படி அளக்கும் அளவுக்கு விவசாய நிலங்களையும், அள்ள அள்ள குறையாத மனித சக்தியையும், அறவியல் அறிஞர்களையும், தத்துவ ஞானிகளையும், கனிம வளங்களையும், உலகமே போற்ற கூடிய குடும்ப அமைப்பையும், வாழ்வியல் நெறிகளையும், ஆன்மிகத்தையும் வைத்து கொண்டு சில லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் அந்நிய நாட்டிற்கு அடிமை பட்டு தான் ஆக வேண்டுமா? நம் நாட்டில் ஒரு சமுக எழுச்சியை ஏற்படுத்தி பல கோடி சுதந்திர போராளிகளின் கனவுகளை நனவாக்க முடியாதா? நாற்பது கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தை சீர்தூக்க முடியாதா? கட்டுகடங்கா பொருளாதார வேற்றுமைகளை தகர்த்தெறிய முடியாதா? அந்நிய முதலீடு என்ற பெயரில் நடக்கும் ஆட்டுழியங்களை வெளிச்சம் போட்டு காட்ட முடியாதா? இளமை துடிப்பை கேளிக்கைக்கும், பணத்திற்கும் அடிமை ஆக்காமல் சமூக எழுச்சிக்கும், நாட்டின் வளர்சிக்கும் முதலீடு செய்வோம்.

தாய் நாட்டையும் , தாய் மொழியையும் நேசிப்போம்! ஒன்றிணைவோம், சுதந்திரத்தை உணர்வோடு கொண்டாடுவோம்!

சுதந்திர தின வாழ்த்துகள்! ஜெய் ஹிந்த்!

அன்புடன்
வி. எஸ். வினோத் குமார்