Sunday, August 21, 2011

மானுடம் தோற்குதம்மா!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மனிதாபிமானத்தை வளர்க்க அவசியமில்லாமல் போய்விட்டது, ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு மனிதாபிமானத்தை சொல்லி தர நேரமில்லாமல் போய்விட்டது, சமுதாயம் அதன் உறுப்பினர்களுக்கு மனிதாபிமானத்தை புரிய வைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. பணமும், பதவியும், கேளிக்கையும் மட்டுமே புரிந்த உணர்விழந்த ஜடத்திடம் மனிதாபிமானத்தை எதிர்பார்ப்பது, பசித்திருக்கும் சிங்கத்திடம் முயல் நட்பை எதிர் பார்ப்பதை காட்டிலும் வேடிக்கையானது!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதி இருந்திருந்தால், இந்த கேடு கேட்ட மானுடத்தை சகித்து கொள்ள முடியாமல் தன்னை தானே அழித்து கொண்டிருப்பான்!
பொருந்தா பொருளாதரத்தையும், முறையில்லா வளர்ச்சியும் தலை மேல் தூக்கி வைத்து ஆடும் விட்டில் பூச்சிகளாக மாறி விட்ட மானுடத்தை கண்டு வேதனை மட்டும் தான் பட முடியும் போலிருக்கிறது!



அன்புடன்,
வி. எஸ். வினோத் குமார்

No comments:

Post a Comment